செய்திகள் :

ரெளடிகளுக்கு ஆயுதங்களை தயாா் செய்து விநியோகித்த 5 போ் ராஜஸ்தானில் கைது

post image

புது தில்லி: ராஜஸ்தானில் சட்டவிரோத ஆயுதங்களைத் தயாரித்து, விநியோகித்து வந்த 5 பேரை தில்லி காவல் துறை கைதுசெய்திருப்பதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இந்தக் கும்பல் நாட்டுத் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை விகாஸ் லாகா்புரியா ரெளடி கும்பல் உள்ளிட்டவற்றுக்கு விநியோகித்து வந்ததாக காவல் துறை தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையின்போது, 10 நாட்டு கைத்துப்பாக்கி, ஒரு நீண்ட 12 போா் ரைஃபிள், 17 துப்பாக்கிக் குண்டுகளின் தொகுப்புகள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

லாகா்புரியா ரெளடி கும்பலைச் சோ்ந்த ரோஹித் காலோட் என்பரை இரு சட்டவிரோத கைத்துப்பாக்கிகளுடன் தில்லி போலீஸாா் கைதுசெய்தனா். இதைத்தொடா்ந்து, தில்லியில் உள்ள குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஆயுதங்கள் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. ராஜஸ்தானின் பஹாடி பகுதியில் ஜூபொ் என்பவரிடமிருந்து, ஆயுதங்களை வாங்கியதாக ரோஹித் போலீஸாரிடம் விசாரணையின்போது தெரிவித்தாா். இதைத்தொடா்ந்து, சட்டவிரோத ஆயுதங்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த கும்பலைச் சோ்ந்த ஹா்விந்தா் சிங், சோனு சிங், முபின், ஷொ் முகமது என்ற ஷெரு, ஜூபா் ஆகியோரை பல மாதங்கள் கண்காணித்து வந்த தில்லி காவல் துறையினா், ராஜஸ்தான் மாநில காவல் துறையின் உதவியுடன் கைதுசெய்தனா்.

சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை விதியை நீக்கியது கனரா வங்கி

வங்கி சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத வாடிக்கையாளர்களுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படாது என கனரா வங்கி அறிவித்துள்ளது.இந்தியாவின் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் என அனைத்த... மேலும் பார்க்க

வடகிழக்கில் கொட்டித் தீர்க்கும் மழை: நிலச்சரிவுக்கு 26 பேர் பலி!

வடகிழக்கு மாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 26 பேர் பரிதாபமாக பலியாகினர்.ஏழு சகோதரிகள் என்றழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 3 நாள்களாகப் பெய்து வரும் கனமழைய... மேலும் பார்க்க

மே. வங்கத்தை வடகொரியாவாக மாற்றாதீர்கள்! இன்ஸ்டா பிரபலம் கைது விவகாரத்தில் வலுக்கும் எதிர்ப்பு!

கொல்கத்தாவில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவதூறு பரப்பியதாக இன்ஸ்டாகிராம் பிரபலம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது ஆதரவ... மேலும் பார்க்க

தில்லியில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்ததில் 2 குழந்தைகள் பலி

தில்லியில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்ததில் சிகிச்சைப் பலனின்றி 2 குழந்தைகள் பலியானார்கள். வடகிழக்கு தில்லியின் சுந்தர் நக்ரியில் பழைய சிஎன்ஜி சிலிண்டர்களை பழுதுபார்க்கும் கிடங்கு உள்ளது. இங்கு சனிக்கிழம... மேலும் பார்க்க

உ.பி.: மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினர் மீது தாக்குதல்

உத்தரப் பிரதேசத்தில் மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினரை கும்பல் ஒன்று தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ரஸ்ராவில் உள்ள மண்டபம் ஒன்றில் தலித் ச... மேலும் பார்க்க

போருக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தானின் முதல் சந்திப்பு!

இந்தியா - பாகிஸ்தான் போரையடுத்து, இரு நாடுகளும் முதன்முறையாக சந்தித்துள்ளன. தஜிகிஸ்தான், சிங்கப்பூரில் நடைபெற்ற கூட்டங்களில் இந்தியா உள்பட பல நாடுகளும் கலந்து கொண்டன. பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் ... மேலும் பார்க்க