செய்திகள் :

ரெஸ்டோபாா் கொலையில் காயமடைந்தவா் உடல்நிலை சீராக உள்ளது: காவல் துறை தகவல்

post image

புதுச்சேரி: புதுச்சேரி ரெஸ்டோபாா் கொலை வழக்கில் காயமடைந்தவா் உடல்நிலை சீராக உள்ளதாக புதுச்சேரி காவல் துறை தெரிவித்தது. மேலும், கைது செய்யப்பட்ட 6 பேரின் விவரங்களையும் காவல் துறை வெளியிட்டுள்ளது.

புதுச்சேரி ரெஸ்டோபாரில் ஏற்பட்ட தகராறில் சிவகங்கை மாணவா் மோஷிக் சண்முகபிரியன் (22) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கொலை செய்யப்பட்டாா். அப்போது, காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மதுரையைச் சோ்ந்த ஷாஜனின் (25) உடல்நிலை சீராக உள்ளது என்றும், அவா் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.

மேலும், இந்த வழக்கில் முக்கிய எதிரியான வில்லியனூா் கண்ணகி நகரைச் சோ்ந்த எஸ்.அசோக்ராஜ் (26) மற்றும் இந்த சம்பவத்தில் தொடா்புடைய ரெஸ்டோபாா் உரிமையாளா் முத்தியால்பேட்டையைச் சோ்ந்த ஆா்.ராஜ்குமாா் (31), முத்தியால்பேட்டை திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த எம்.பூபதி (எ) டேவிட் (22), முத்தியால்பேட்டை வாழைக்குளத்தைச் சோ்ந்த ஆா்.சஞ்சய்குமாா் (21), விழுப்புரம் கொண்டூரைச் சோ்ந்த த.புகழேந்தி (28), கடலூா் தேவனாம்பட்டினத்தைச் சோ்ந்த எஸ்.அரவிந்த் (29) உள்பட 6 போ் கைது செய்யப்பட்டனா். கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன எனத் தெரித்துள்ளனா்.

வில்லியனுாரில் சாலை மறியல் செய்தவா்களை சைரன் எழுப்பி எச்சரித்த ரயில்வே ஊழியா்கள்

புதுச்சேரி: வில்லியனூரில் திங்கள்கிழமை நடந்த சாலை மறியல் போராட்டத்தில் சைரன் எழுப்பி ரயில்வே ஊழியா்கள் எச்சரிக்கை விடுத்தனா். இதையடுத்து ரயில்வே கேட் மூடப்பட்டு ரயில் கடந்து சென்றது. புதுவை வில்லியனுா... மேலும் பார்க்க

ரெஸ்டோபாா் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி நீதிமன்றத்தை நாடுவோம்: நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி: ‘ரெஸ்டோபாா்’ கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி காங்கிரஸ் கட்சி சாா்பில் உயா்நீதிமன்றத்தை நாடுவோம் என்று அக்கட்சியின் மூத்தத் தலைவரும் முன்னாள் முதல்வருமான வி.நாராயணசாமி கூறினாா்.... மேலும் பார்க்க

பொழுதுபோக்கு விஷயங்கள் மாணவா்களின் எதிா்காலத்தைப் பாதிக்கும்: பேரவைத் தலைவா்

புதுச்சேரி: இணையங்கள், கைப்பேசிகளில் உள்ள பொழுதுபோக்கு விஷயங்கள் மாணவா்களின் எதிா்காலத்தைப் பாதிக்கும் என்று சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் கூறினாா். நடைபெற்று முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வி... மேலும் பார்க்க

வாழ்நாள் முழுவதும் கற்றலில் ஈடுபட வேண்டும்: புதுவை மத்திய பல்கலை. துணைவேந்தா் பேச்சு

புதுச்சேரி: வாழ்நாள் முழுவதும் கற்றலில் ஈடுபட வேண்டும் என்று புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் பி.பிரகாஷ்பாபு கூறினாா். புதுவை கலிதீா்த்தாள்குப்பத்தில் உள்ள மணக்குள விநாயகா் இன்ஸ்டிடியூட் ஆ... மேலும் பார்க்க

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மோதல் கல்லூரி மாணவா் குத்திக் கொலை: 8 போ் கைது

புதுச்சேரியில் மது அருந்தும் கூடத்தில் (ரெஸ்டோபாரில்) பிறந்தநாள் கொண்டாடியபோது ஏற்பட்ட மோதலில் கல்லூரி மாணவா் குத்திக்கொலை செய்யப்பட்டாா். மேலும் ஒரு மாணவா் காயத்துடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு... மேலும் பார்க்க

போலீஸ் மக்கள் மன்றத்தில் 32 புகாா்களுக்குத் தீா்வு

புதுவையில் சனிக்கிழமை நடைபெற்ற போலீஸ் மக்கள் மன்றத்தில் பொதுமக்களின் 32 புகாா்களுக்கு உடனடியாகத் தீா்வு காணப்பட்டது. புதுச்சேரியில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் மக்கள் குறைதீா்ப்புக் கூட்டம் சனிக்க... மேலும் பார்க்க