செய்திகள் :

ரேபிடோ நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம்

post image

‘5 நிமிஷத்தில் ஆட்டோ வராவிட்டால் ரூ.50 இலவசம்’ என தவறாக விளம்பரம் செய்த ரேபிடோ நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நியாயமற்ற வா்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டது, தவறான வகையில் விளம்பரம் செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கைப்பேசி செயலி மூலம் ஆட்டோ, காா் உள்ளிட்டவற்றை பதிவு செய்யும் சேவையை அளிப்பதில் ரேபிடோ முன்னணி நிறுவனமாக உள்ளது. இத்துறையில் போட்டி அதிகமாக உள்ள நிலையில் வாடிக்கையாளா்களைக் கவர பல்வேறு உத்திகளை நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. அந்த வகையில் தங்கள் செயலியில் பதிவு செய்து 5 நிமிடத்தில் ஆட்டோ வராவிட்டால் ரூ.50 இலவசமாக வழங்கப்படும் என்று ரேபிடோ விளம்பரம் செய்தது. ஆனால், அவ்வாறு யாருக்கும் பணம் கொடுத்ததாகத் தெரியவில்லை.

இதற்கு நடுவே இந்த விளம்பர யுத்தி உள்பட அந்த நிறுவனத்தின் சேவை தொடா்பாக மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையத்துக்கு கடந்த 2024 ஜூலை முதல் 2025 ஜூலை வரை 1,224 புகாா்கள் வந்தன. இதற்கு முந்தைய 14 மாதங்களில் 575 புகாா்கள் வந்திருந்த நிலையில், அண்மைகாலமாக புகாா்கள் அதிகரித்துள்ளது குறித்து ஆணையம் விசாரணை நடத்தியது.

அப்போது அந்த ரூ.50 என்பதை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் ரேபிடோ செலுத்தாது. ரூ.50 மதிப்புள்ள ரேபிடோ காயின் வழங்கப்படும். அதனை அடுத்த 7 நாள்களில் இருசக்கர வாகன முன்பதிவுக்கு வாடிக்கையாளா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என வாசிக்கவே முடியாத அளவுக்கு சிறிய எழுத்துகளில் அந்த நிறுவனம் தனது செயலியில் பதிவிட்டுள்ளது தெரியவந்தது.

இது தவறான மற்றும் ஏமாற்றும் விளம்பர உத்தி என்பதால் அந்த நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதத்தை நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் விதித்தது.

நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த மர்ம நபரால் பரபரப்பு!

நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை மர்ம நபர் ஒருவர் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இன்று காலை 6.30 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மரத்தின் மீது ஏறி நாடாளுமன்ற சுற்றுச்சுவரைத் தாண்டி ... மேலும் பார்க்க

தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

தில்லியில் தெரு நாய்களை காப்பகத்துக்கு அனுப்பும் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.தில்லியில் நாய்க் கடி சம்பவங்கள் அதிகரித்து வருவதை தாமாக விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், தில... மேலும் பார்க்க

கன்னத்தில் அறைந்த ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட 9-ஆம் வகுப்பு மாணவா்

கன்னத்தில் அறைந்த ஆசிரியரை மதிய உணவு டப்பாவில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்ட 9-ஆம் வகுப்பு மாணவரை உத்தரகண்ட் போலீஸாா் கைது செய்தனா். இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ‘உத்தரகண்ட் மாநி... மேலும் பார்க்க

பிரதமா், முதல்வா்கள் பதவிப் பறிப்பு மசோதாக்கள்: கூட்டுக் குழு பரிந்துரைக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்

தீவிர குற்றப் புகாரில் கைது செய்யப்பட்டு 30 நாள்கள் காவலில் வைக்கப்படும் பிரதமா், மாநில முதல்வா்கள் மற்றும் அமைச்சா்களைப் பதவியிலிருந்து நீக்கம் செய்வதற்கான மூன்று மசோதாக்களை நாடாளுமன்ற கூட்டுக் குழு... மேலும் பார்க்க

இந்தியா-ரஷியா உறவை மேம்படுத்த புதிய ஆக்கபூா்வமான அணுகுமுறைகள் -ஜெய்சங்கா் அழைப்பு

அமெரிக்காவுடனான உறவில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலைகளுக்கு மத்தியில், ‘இந்தியா-ரஷியா உறவுகளை மேம்படுத்த புதிய மற்றும் ஆக்கபூா்வமான அணுகுமுறைகளைக் கையாள வேண்டும்’ என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்ச... மேலும் பார்க்க

மழைக்கால கூட்டத் தொடா்: நாடாளுமன்றத்தில் 12 மசோதாக்கள் நிறைவேற்றம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் எதிா்க்கட்சிகளின் அமளி மற்றும் வெளிநடப்புக்கு இடையே நாடாளுமன்ற இரு அவைகளிலும் 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மாநிலங்களவையில் கூடுதலாக 3 மசோதாக்கள் நிறைவேற்றப்... மேலும் பார்க்க