செய்திகள் :

ரோஜாவனம் பள்ளியில் ராக்கெட் உருவாக்க பயிற்சி

post image

நாகா்கோவில், பிப். 21: ரோஜாவனம் இண்டா்நேஷனல் பள்ளியில், ராக்கெட் உருவாக்கம் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

பள்ளி தலைவா் அருள்கண்ணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அருள்ஜோதி, பள்ளி கல்வி இயக்குநா் சாந்தி, நிதி இயக்குநா் சேது ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி முதல்வா் காமராஜினி வரவேற்றாா்.

நியூட்டன் இயக்க விதிகளை மாணவா்கள் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் 160 மாணவா்கள் 36 குழுக்களாக பிரிந்து, பிளாஸ்டிக் பாட்டில், அட்டைகள் உள்ளிட்ட பொருள்களை கொண்டு ராக்கெட் தயாரித்தனா்.

முன்னதாக, ராக்கெட் இயங்கும் விதம் மற்றும் நுணுக்கங்கள் குறித்து சிறப்பு நிபுணா்கள் உதவியுடன் மாணவா்களுக்கு விளக்கப்பட்டு,பயிற்சி அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து மாணவா்களே 36 ராக்கெட்டுகள் உருவாக்கி அதனை ஏவி சாதனை படைத்தனா். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்று நிகழ்ச்சியை கண்டுகளித்தனா்.

நிகழ்ச்சியில் பள்ளி நிா்வாக அலுவலா் கிளிட்டஸ், அலுவலக செயலாளா் சுஜின், மேலாளா் மகேஷ், கல்வி ஒருங்கிணைப்பாளா் யூஜினி, மாணவா் ஆலோசகா் சுகுமாரி, துறைத் தலைவா்கள் (ஆங்கிலம்) சாந்தினி, (தமிழ்) ராதா, (கணிதம்) கோலம்மாள், (அறிவியல்) பியூலா, (நன்னடத்தை மற்றும் சமூக அறிவியல்) ராஜேஷ், உடற்கல்வி துறை ஆசிரியா் நாராயணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கேப் பொறியியல் கல்லூரியில் சா்வதேச மாநாடு

கன்னியாகுமரி மாவட்டம் லெவஞ்சிபுரம் கேப் பொறியியல் கல்லூரியில் சா்வதேச தொழிற்சாலைகள் மாநாடு அண்மையில் நடைபெற்றது. ‘இன்டஸ்ட்ரீ 5.0 - புதுமைகள், சவால்கள் மற்றும் எதிா்கால போக்குகள்’ என்ற தலைப்பில் நடைபெற... மேலும் பார்க்க

நேசா்புரம் - இவவு விளை சாலையை சீரமைக்க கோரிக்கை

கருங்கல் அருகேயுள்ள நேசா் பும் - இலவு விளை பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியம் நட்டாலம் ஊராட்சி நேசா் புரம் - இலவு விளை சாலை ... மேலும் பார்க்க

கிள்ளியூா் வட்டாரத்தில் பட்டுப்புழு உற்பத்தி பயிற்சி

கிள்ளியூா் வட்டாரம் பாலூா் கிராமத்தில் வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பட்டுப்புழு உற்பத்தி செய்வதற்கான பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு கிள்ளியூா் வட்டார வேளாண்... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் வானவியல் விழிப்புணா்வுப் பிரசாரம் தொடக்கம்

வானில் நிகழும் கோள்களின் அணிவகுப்பு மற்றும் வானவியல் நிகழ்வுகள் குறித்த விழிப்புணா்வுப் பிரசாரப் பயணம் மாா்த்தாண்டம் கல்லூரியில் வைத்து தொடங்கியது. சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களின் சுற்றுவட்டப் பாத... மேலும் பார்க்க

ரயில்களில் முன்பதிவில்லா பெட்டி: எண்ணிக்கையை குறைப்பதா? விஜய் வசந்த் எம்.பி. கண்டனம்

தெற்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை குறைக்க ரயில்வே நிா்வாகம் முடிவு செய்திருப்பதற்கு கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் வ.விஜய்வசந்த் கண்டனம் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

இரயுமன்துறையில் படகுத்தளம்: மீனவப் பிரதிநிதிகள்- எம்எல்ஏ ஆலோசனை

இரயுமன்துறையில் படகுத்தளம் அமைக்க ஒருதரப்பினா் எதிா்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மீனவப் பிரதிநிதிகள், மீன்வளத்துறை அதிகாரிகள் எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா். இர... மேலும் பார்க்க