செய்திகள் :

"ரோஹித் தலைமையிலான இந்திய அணி T20 உலகக் கோப்பை, CT 2025 வென்றதில் எனக்கு ஆச்சர்யம் இல்லை" - கங்குலி

post image

இந்திய கிரிக்கெட் அணி 2024 டி20 உலகக் கோப்பை வென்ற கையோடு ஓய்வை அறிவித்த ரோஹித் சர்மா, அதன் பிறகு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கேப்டனாக அணியை வழிநடத்தினார்.

பிறகு, நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கெதிராக டெஸ்ட் தொடரை இழந்தபோது, டெஸ்ட் போட்டிகளிலிருந்து ரோஹித் ஓய்வுபெற வேண்டும் என பேச்சுக்கள் எழுந்த இரண்டே மாதங்களில், துபாயில் சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணிக்கு வென்று கொடுத்தார்.

ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா

இவ்வாறிருக்க, அடுத்த மாதம் இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் கேப்டன்சியிலிருந்து ரோஹித் நீக்கப்படுவார் என்று பேச்சுக்கள் அடிபட்ட அடுத்த சில மணிநேரத்திலேயே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் (மே 7) ரோஹித்.

இவரின் இந்த முடிவால், ஒரு தரப்பினர் பிசிசிஐ-க்கு எதிராகக் கருத்து தெரிவிக்க, இன்னொரு தரப்பினர் ஓய்வு அவரின் தனிப்பட்ட முடிவு என்று கூறிவந்தனர்.

இந்த நிலையில், ரோஹித்தின் ஓய்வு குறித்து தனியார் ஊடகத்திடம் பேசியிருக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, "ஓய்வு என்பது எல்லோருடைய தனிப்பட்ட முடிவு. அதுபோல அவர் ஓய்வுபெற இதுவே சரியான நேரம் என்பதை நான் புரிந்துகொள்கிறேன்.

இந்தியாவுக்காக அவர் நிறைய விளையாடியிருக்கிறார். அவரின் அடுத்தகட்ட பயணத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சவுரவ் கங்குலி
சவுரவ் கங்குலி

அவர் ஒரு நல்ல தலைவராக இருந்தார். அதனால்தான் அவர் இந்தியாவின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

எனவே, அவர் தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி பட்டங்களை வென்றதில் எனக்கு ஆச்சர்யமில்லை.

இது அவருக்கு வெற்றிகரமான கரியர். இதை நினைத்து அவர் பெருமைப்பட வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

Ravindra Jadeja: யாரும் தகர்க்க முடியாத சாதனையை படைத்த ஜடேஜா.. காரணமாக அமைந்த வங்கதேச வீரர்!

இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர் ரவீந்திர டேஜா, டெஸ்ட் கிர்க்கெட்டில் ஆல் ரவுண்டராக யாராலும் முறியடிக்க முடியாத சாதனையைப் படைத்தார். ஐபிஎல் சீசன் நடந்துகொண்டிருக்கையில் டெஸ்டில் இவ்வளவு பெரிய சாதன... மேலும் பார்க்க

IPL 2025: 'DJ, பெண்கள் நடனம் போன்ற கொண்டாட்டங்கள் வேண்டாம்'- சுனில் கவாஸ்கர் சொல்வதென்ன?

கடந்த 22 ஆம் தேதி தொடங்கிய 18-வது ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது.இதனிடையே இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே ஏற்பட்ட பதற்றம் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பி... மேலும் பார்க்க

Kohli: `ஆகச்சிறந்த டெஸ்ட் கேப்டன்; இன்னும் 2 வருடங்கள் விளையாடியிருக்கலாம்' - கோலி குறித்து அஷ்வின்

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறுவதாக விராட் கோலி மே 12-ம் தேதி அறிவித்தார். இவரின் ஓய்வு முடிவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.விராட் கோலியின் ஓய்வு குறித்து ரசிகர்கள், கி... மேலும் பார்க்க

"கில் அல்ல, அந்த வீரர்தான் தகுதியானவர்" - இந்திய டெஸ்ட் கேப்டன் பதவிக்கு யாரைச் சொல்கிறார் அஸ்வின்

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) இங்கிலாந்துக்கெதிராக அதன் சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது.இவ்வாறிருக்க, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின்... மேலும் பார்க்க

Kohli: ஓய்வு அறிவிப்பிற்குப் பிறகு ஆசிரமத்தில் வழிபாடு... வைரலாகும் படங்கள் | Photo Album

Virat Kohli : "1.4 பில்லியன் இதயங்களை உடைத்த கோலி" - உச்சி முகரும் ஆஸ்திரேலிய ஊடகங்கள்!சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpXசினிமா தொடர்பான எக்ஸ்க்ளூ... மேலும் பார்க்க

Virat Kohli : "1.4 பில்லியன் இதயங்களை உடைத்த கோலி" - உச்சி முகரும் ஆஸ்திரேலிய ஊடகங்கள்!

இந்திய வீரர் விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக நேற்று (மே 12) அறிவித்தார். கோலியின் இந்த திடீர் அறிவிப்பால் அதிர்ச்சியடைந்த ரசிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் அவருக்கு வாழ்வின் அட... மேலும் பார்க்க