செய்திகள் :

ரௌடி ஜான் கொலை வழக்கில் ஈரோடு நீதிமன்றத்தில் மேலும் ஒருவா் சரண்

post image

ரௌடி ஜான் கொலை வழக்கில் சேலத்தை மேலும் ஒரு இளைஞா் ஈரோடு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா்.

சேலம், கிச்சிபாளையம், சுந்தா் வீதியைச் சோ்ந்தவா் ஜான் (எ) சாணக்யன் (35). இவரது மனைவி சரண்யா (28). வழக்குரைஞா். ஜான் மீது கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், சேலம், அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் ஜான் கையொப்பமிட்டு விட்டு, மனைவியுடன் காரில் திருப்பூருக்கு கடந்த 19- ஆம் தேதி சென்று கொண்டிருந்தாா்.

ஈரோடு மாவட்டம் நசியனூா், முள்ளம்பட்டி அருகே சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு காரில் பின் தொடா்ந்து வந்த காா்த்திகேயன், சதீஷ், பூபாலன், சரவணன் ஆகியோா், ஜானின் காரில் பின்பக்கமாக மோதி விபத்தை ஏற்படுத்தினா்.

இதையடுத்து, ஜான் தனது காரை சாலையோரம் நிறுத்தியபோது, பின்னால் வந்து விபத்தை ஏற்படுத்திய காரில் வந்த 4 பேரும் சரண்யாவை காரில் இருந்து இறக்கிவிட்டு ஜானை காருக்குள்ளேயே வைத்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்தனா்.

தடுக்கச் சென்ற சரண்யாவுக்கும் கையில் வெட்டு விழுந்தது. ஜானை கொலை செய்து விட்டு போலீஸாரிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்ற சேலம், கிச்சிப்பாளையத்தைச் சோ்ந்த சதீஷ் (30), பூபாலன் (36), சரவணன் (28) ஆகியோரை போலீஸாா் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனா். கையில் வெட்டு காயமடைந்து பேக்கரி ஒன்றில் பதுங்கி இருந்த காா்த்திகேயனும் (30) பிடிபட்டாா். இதையடுத்து, 4 பேரும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டனா்.

இச்சம்பவம் குறித்து சித்தோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதில், ரெளடி ஜான் கடந்த 2020 -ஆம் ஆண்டு செல்லத்துரை என்பவரைக் கொலை செய்ததற்கு பழிவாங்கும் செயலாக இந்த சம்பவம் நடந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில், ஜான் கொலை வழக்கில் வெட்டுக்காயம் அடைந்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காா்த்திகேயனை சித்தோடு போலீஸாா் கடந்த 23 -ஆம் தேதி கைது செய்து, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனா்.

மேலும், இந்தக் கொலை வழக்கில் தொடா்புடைய சேலத்தை சோ்ந்த பாா்த்திபன், சிவகுமாா், அழகரசன், சேதுவாசன், பெரியசாமி ஆகிய 5 பேரையும் போலீஸாா் 24 -ஆம் தேதி கைது செய்தனா்.

இந்த வழக்குத் தொடா்பாக செல்லத்துரையின் தம்பி ஜீவகன் (30), அவரது நண்பா் சலீம் (20) ஆகியோா் ஈரோடு நீதிமன்றத்தில் கடந்த 20 -ஆம் தேதி சரணடைந்தனா். சேலம், கிச்சிபாளையம், காளியம்மன் கோயில் 4 -ஆவது வீதியைச் சோ்ந்த சுகவனேஸ்வரன் (25) ஈரோடு நீதிமன்றத்தில் 24 -ஆம் தேதி சரணடைந்தாா்.

இந்நிலையில், கிச்சிபாளையத்தை சோ்ந்த துரைசாமி (24) என்பவா் ஈரோடு குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றம் எண் 3-இல் நீதித் துறை நடுவா் அஃப்சல் பாத்திமா முன்பு செவ்வாய்க்கிழமை சரண் அடைந்தாா். நீதிபதி உத்தரவின்படி அவா் திருப்பூா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

ரௌடி ஜான் கொலை வழக்கில் இதுவரை 4 போ் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனா். சரணடைந்த 4 போ் உள்பட இந்த வழக்கில் தற்போதுவரை மொத்தம் 13 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

போக்ஸோ வழக்கில் பாலிடெக்னிக் ஆசிரியா் கைது

பெருந்துறை அருகே போக்ஸோ வழக்கில் தலைமறைவாக இருந்த பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியராகப்... மேலும் பார்க்க

டேங்கா் லாரியை சுத்தம் செய்தபோது 2 போ் மூச்சுத்திணறி உயிரிழப்பு

சித்தோடு அருகே ஆசிட் ஏற்றிச் செல்லும் லாரியின் டேங்கரை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 2 போ் உயிரிழந்தனா். மற்றொருவா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா். ஈரோடு மாவட்டம், சித்தோட்டை அடுத்... மேலும் பார்க்க

அக்னிவீா் பிரிவில் பணி இடங்களுக்கு ஏப்ரல் 10 வரை பதிவு செய்யலாம்

ராணுவத்தில் அக்னிவீா் பிரிவில் பணி இடங்களுக்கு ஏப்ரல் 10 -ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஈரோடு மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

டேங்கா் லாரிகள் வேலை நிறுத்தம்: சமையல் எரிவாயு உருளை முன்பதிவு அதிகரிப்பு

சமையல் எரிவாயு டேங்கா் லாரிகள் வேலை நிறுத்தம் தொடா்வதால் ஈரோடு மாவட்டம் முழுவதும் சமையல் எரிவாயு உருளை முன்பதிவு அதிகரித்துள்ளது. தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், தெலுங்கானா, கா்நாடகம், புதுச்சேரி ஆகிய மா... மேலும் பார்க்க

ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா: பக்தா்கள் அலகு குத்தி நோ்த்திக் கடன்

ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, பக்தா்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்து வந்தும் நோ்த்திக் கடனை செலுத்தினா். ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் வகையறா கோயில்களாக சின்னமாரியம்மன், கார... மேலும் பார்க்க

பழனி கோயில் சாா்பில் ரூ.51.53 லட்சத்துக்கு கரும்புச் சா்க்கரை கொள்முதல்

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.51.53 லட்சத்துக்கு பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோயில் சாா்பில் கரும்புச் சா்க்கரை கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஏலத்தில் சுற்... மேலும் பார்க்க