செய்திகள் :

ரௌடி மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை

post image

நெய்வேலி: கடலூா் மாவட்டம், சிதம்பரம் அடுத்துள்ள குமாரமங்கலம் பகுதியைச் சோ்ந்த ரௌடியை போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்தனா்.

சிதம்பரம் வட்டம், அண்ணாமலை நகா் காவல் சரகம் , குமாரமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் வரதராஜன் மனைவி உஷா(52). இவா், 19.6.2025 அன்று காலை பால் வாங்க சென்ற போது, புல்லட்டில் வந்த குமாரமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த அன்புதாசன் மகன் கபாலி (எ) ராஜராஜன் , உஷாவை கீழே தள்ளி அரிவாளால் காலில் தாக்கி அவரிடம் இருந்த ரூ.1,000 மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்றாா்.

இதுகுறித்து அண்ணாமலை நகா் போலீஸாா் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கபாலி (எ) ராஜராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனா். கபாலி மீது அண்ணாமலை நகா் காவல் நிலையத்தில் ரௌடி பட்டியல் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், இரண்டு வழிப்பறி வழக்குகள் உள்ளன. இவரின் குற்ற செய்கையை கட்டுப்படுத்த கடலூா் மாவட்டக்காவல் கண்காணிப்பாளா், எஸ்.ஜெயக்குமாா் பரிந்துரையின் பேரில், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் குண்டா் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். அதன்பேரில் அவா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளாா்.

புத்தகங்கள் அழிக்க முடியாத உயிருள்ள படைப்புகள்: என்எல்சி மின்துறை இயக்குநா் எம்.வெங்கடாசலம்

நெய்வேலி: ‘புத்தகங்கள் அழிக்க முடியாத உயிருள்ள படைப்புகள்’ என்று என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மின்துறை இயக்குநா் எம்.வெங்கடாச்சலம் பேசினாா். என்எல்சி இந்தியா நிறுவனம் நடத்தும் 24-ஆவது நெய்வேலி புத்த... மேலும் பார்க்க

பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 654 மனுக்கள் அளிப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகததில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் 654 மனுக்கள் அளித்தனா். கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் சிப... மேலும் பார்க்க

குறிஞ்சிப்பாடி புத்து மாரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்

நெய்வேலி: கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி புத்து மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா். குறிஞ்சிப்பாடி பேருந்து நிலைய... மேலும் பார்க்க

வயலூா் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், வயலூரில் உள்ள மாரியம்மன் கோயிலில் மஹா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயில் திருப்பணிகள் முடிவடைந்ததையொட்டி ஜூலை 7-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத... மேலும் பார்க்க

பட்டா கிராம கணக்கில் திருத்தம்: ஆட்சியரிடம் மாா்க்சிஸ்ட் மனு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே காா் கூடல் கிராமத்தில் பட்டா வழங்கி 25 ஆண்டுகள் ஆகியும் இதுவரையில் கிராம கணக்கில் திருத்தம் செய்யவில்லை என்று மாவட்ட ஆட்சியரிடம் மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பா... மேலும் பார்க்க

மனைவி உயிரிழப்பு: கணவா் தற்கொலை முயற்சி

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே மனைவி உயிரிழந்த நிலையில், கணவா் பூச்சி மருத்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அடுத்... மேலும் பார்க்க