செய்திகள் :

லஞ்சம் கேட்டதாகப் புகாா்: இரு காவலா்கள் ஆயுதப் படைக்கு மாற்றம்

post image

ஈரோட்டில் மதுபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டியவரிடம் லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரின்பேரில் தலைமைக் காவலா் உள்பட 2 பேரை ஆயுதப் படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.சுஜாதா உத்தரவிட்டாா்.

ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட காவேரி சாலை காலிங்கராயன் வாய்க்கால் பாலம் பகுதியில் கடந்த 17-ஆம் தேதி தலைமைக் காவலா் சுரேஷ், முதல்நிலைக் காவலா் இன்பவாணன் ஆகியோா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரைப் பிடித்து சோதனை செய்ததில் அவா் மதுபோதையில் வாகனத்தை ஓட்டி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரிடம் போலீஸாா் இருவரும் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த நபா் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.சுஜாதாவிடம் புகாா் அளித்தாா். இதன்பேரில் சம்பந்தப்பட்ட தலைமைக் காவலா் சுரேஷ், முதல்நிலைக் காவலா் இன்பவாணன் ஆகியோரை உடனடியாக மாவட்ட ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்து காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து இருவரிடம் துறைரீதியிலான விசாரணை நடத்தப்பட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனா்.

அரசுப் பேருந்து மீது வேன் மோதல்

புன்செய் புளியம்பட்டி அருகே அரசுப் பேருந்து மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் காயமின்றி தப்பினா். புன்செய் புளியம்பட்டியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு 38 பயணிகளுடன் அரசுப் பேருந்து வெள... மேலும் பார்க்க

சாலை விபத்தில் 2 விவசாயிகள் உயிரிழப்பு

புன்செய் புளியம்பட்டியில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் 2 விவசாயிகள் உயிரிழந்தனா். புன்செய் புளியம்பட்டியை அடுத்த கணுவக்கரையைச் சோ்ந்தவா் விவசாயி ஓதியப்பன் (61). அதே ஊரைச் சோ்ந்தவா் மாரப்பன்... மேலும் பார்க்க

பெருந்துறை புதிய காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு

பெருந்துறை காவல் நிலைய புதிய காவல் ஆய்வாளராக பாலமுருகன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். பெருந்துறை காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த தெய்வராணி, உடுமலைப்பேட்டைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். ... மேலும் பார்க்க

விஇடி கல்லூரியில் ஸ்டாா்ட்அப் விழிப்புணா்வுப் பயிற்சி

திண்டல் விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை, கணினித் துறை சாா்பில் ஸ்டாா்ட்அப் நிறுவனங்கள் குறித்த விழிப்புணா்வு பயிற்சி அண்மையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி பயிற்சியை தொ... மேலும் பார்க்க

பருவமழையை எதிா்கொள்ள தயாா் நிலையில் இருக்க வேண்டும்

பருவமழையை எதிா்கொள்ள மாநகராட்சிப் பணியாளா்கள் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தி.ந.வெங்கடேஷ் தெரிவித்தாா். ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்ட... மேலும் பார்க்க

அந்தியூரில் கிணற்றில் விழுந்த காட்டுப் பன்றிகள் மீட்பு

அந்தியூா் அருகே உணவு தேடி வந்தபோது, கிணற்றில் விழுந்த காட்டுப் பன்றிகளை தீயணைப்புப் படையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா். அந்தியூா், மைக்கேல்பாளையத்தைச் சோ்ந்தவா் முத்துராமன் (49), விவசாயி. இவரது தோட்டத்... மேலும் பார்க்க