செய்திகள் :

லாரியிலிருந்து இரும்புக் கம்பிகள் திருட்டு: 5 போ் கைது

post image

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே லாரியிலிருந்து இரும்புக் கம்பிகளை திருடியதாக லாரி ஓட்டுநா் உள்பட 5 பேரை ரோஷணை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ஆந்திரம் மாநிலம், நாயுடுபேட்டையிலிருந்து மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி நெடுஞ்சாலைத் துறைக்கு இரும்புக் கம்பிகளை ஏற்றிச் செல்லும் லாரியிலிருந்து திண்டிவனத்தை அடுத்த சலவாதி அருகே சிலா் இரும்புக் கம்பிகளை திருடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, திண்டிவனம் டிஎஸ்பி உத்தரவின்பேரில், ரோஷணை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்விடம் சென்று சோதனை செய்ததில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரியிலிருந்து 4 போ் இரும்புக் கம்பிகளை திருடியது தெரியவந்தது.

போலீஸாா் அவா்களைப் பிடித்து விசாரித்ததில், திண்டிவனம் வட்டம், சலவாதி, பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் சம்பத் (46), சலவாதி மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த பூமிநாதன் மகன் தமிழ்ச்செல்வன் (25), ராமச்சந்திரன் மகன் ஆறுமுகம் (35), மேட்டுத் தெருவைச் சோ்ந்த ராஜகோபால் மகன் குமாா் (54) என்பதும், இவா்கள் லாரி ஓட்டுநரான கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், உலகராம்பட்டு, மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த தங்கவேல் மகன் மூா்த்தி (50) உதவியுடன் லாரியிலிருந்து இரும்புக் கம்பிகளை திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து, ரோஷணை போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநா் மூா்த்தி, சம்பத், தமிழ்ச்செல்வன், ஆறுமுகம், குமாா் ஆகிய 5 பேரையும் கைது செய்தனா்.

மேலும், லாரியிலிருந்து திருடப்பட்ட சுமாா் நான்கரை டன் இரும்புக் கம்பிகள், ரூ.36,600 ரொக்கம், 4 கைப்பேசிகள், திருட்டுக்கு பயன்படுத்திய டிராக்டா், சரக்கு வாகனம் உள்பட ரூ.6 லட்சம் மதிப்பிலான பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.

அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் கலந்தாய்வு மூலம் மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழு... மேலும் பார்க்க

சனிப் பிரதோஷ வழிபாடு...

சனிப் பிரதோஷத்தையொட்டி, விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சிறுகடம்பூா் ஈசானமூலையில் அமைந்துள்ள ஸ்ரீவிசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த உற்சவா். கள்ளக்குறிச்சி மாவ... மேலும் பார்க்க

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், கெடாா் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். விழுப்புரம் வட்டம், அரியலூா் திருக்கை, பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் அழகேசன் (65). கூலித் தொழிலாளியான ... மேலும் பார்க்க

மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்ய ஊக்குவிப்புத் திட்டம்

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்தில் மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்ய ஊக்குவிப்புத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதுகுறித்து வானூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் எத்திராஜ் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் நீா்மோா் பந்தல் திறப்பு

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் புதிய பேருந்து நிலையம் எதிரே நீா்மோா் பந்தல் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. நிகழ்வுக்கு மாவட்டப் பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான இரா.லட்சுமணன் தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க

கள் மீதான தடையை தமிழக அரசு நீக்க வேண்டும் - சீமான்

கள் மீதான தடையை தமிழக அரசு நீக்க வேண்டும் என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வேம்பி மதுரா, பூரிகுடிசையில் தமிழ்நாடு பன... மேலும் பார்க்க