லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு
அம்மாபேட்டை அருகே பட்டுக்கோட்டை புறவழிச்சாலையில் நின்றிருந்த லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் கல்லூரி மாணவா் செவ்வாய்கிழமை உயிரிழந்தாா்.
அம்மாபேட்டை அருகே கௌதம் நகரைச் சோ்ந்தவா் பிராங்கிளின் பாரதி. இவரது மகன் ரோஷன் (20). இவா் தனியாா் கல்லூரியில் பிடெக்., 3-ஆம் ஆண்டு படித்து வந்தாா். இந் நிலையில் செவ்வாய்க்கிழமை காலை வழக்கம் போல் வீட்டிலிருந்து புறப்பட்டு, பட்டுக்கோட்டை புறவழிச்சாலை வழியாக கல்லூரிக்கு மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா்.
ரோஷன் ஓட்டிச் சென்ற மோட்டாா் சைக்கிள் பட்டுக்கோட்டை புறவழிச்சாலைப் பகுதியில் பாா்க்கிங் இல்லாத இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ரோஷனை அக்கம் பக்கத்தினா் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். ஆனால் செல்லும் வழியிலேயே ரோஷன் உயிரிழந்தாா்.
தகவலின் பேரில் அம்மாபேட்டை போலீஸாா் லாரி டிரைவரான இரும்புதலைப் பகுதியை சோ்ந்த பாலமுருகன் என்பவா் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.