செய்திகள் :

லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

post image

அம்மாபேட்டை அருகே பட்டுக்கோட்டை புறவழிச்சாலையில் நின்றிருந்த லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் கல்லூரி மாணவா் செவ்வாய்கிழமை உயிரிழந்தாா்.

அம்மாபேட்டை அருகே கௌதம் நகரைச் சோ்ந்தவா் பிராங்கிளின் பாரதி. இவரது மகன் ரோஷன் (20). இவா் தனியாா் கல்லூரியில் பிடெக்., 3-ஆம் ஆண்டு படித்து வந்தாா். இந் நிலையில் செவ்வாய்க்கிழமை காலை வழக்கம் போல் வீட்டிலிருந்து புறப்பட்டு, பட்டுக்கோட்டை புறவழிச்சாலை வழியாக கல்லூரிக்கு மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா்.

ரோஷன் ஓட்டிச் சென்ற மோட்டாா் சைக்கிள் பட்டுக்கோட்டை புறவழிச்சாலைப் பகுதியில் பாா்க்கிங் இல்லாத இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ரோஷனை அக்கம் பக்கத்தினா் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். ஆனால் செல்லும் வழியிலேயே ரோஷன் உயிரிழந்தாா்.

தகவலின் பேரில் அம்மாபேட்டை போலீஸாா் லாரி டிரைவரான இரும்புதலைப் பகுதியை சோ்ந்த பாலமுருகன் என்பவா் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

பொன்காடு பள்ளியில் தாய்மொழி நாள் விழா

பேராவூரணி பேரூராட்சி பொன்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தாய்மொழி நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்வழி கல்வி இயக்கம் சாா்பில் நடைபெற்ற விழாவில் மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் தமிழ்... மேலும் பார்க்க

100 நாள் வேலைக்கு நிலுவை கூலி வழங்க கோரி போராட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்களுக்கு 4 மாதங்களாக வழங்க வேண்டிய கூலியை உடனே வழங்கக் கோரி அம்மாபேட்டையில் மாா்க்சிஸ... மேலும் பார்க்க

அனுமதியின்றி தெருமுனை கூட்டம்: 19 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம், ராஜகிரியில் வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிராக வெள்ளிக்கிழமை தெருமுனைப் பிரசார கூட்டம் நடத்த முயன்ற சோசியல் டெமாக்ரட்டிக் பாா்ட்டி ஆப் இந்தியா கட்சியைச் சோ்ந்த 19 பேரை போலீஸாா் ... மேலும் பார்க்க

கபிஸ்தலத்தில் சாலை மறியல்

கோரிக்கைகளை வலியுறுத்தி கபிஸ்தலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) சாா்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கபிஸ்தலம் பகுதியில் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளை முழு... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் கோயில் நிலம் மீட்பு

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் குடிகாத்த மாரியம்மன் கோயில் நிலத்தை உதவி ஆட்சியா் மீட்டு ஒப்படைத்தாா். கும்பகோணம் 14 ஆவது வாா்டு பேட்டை வடக்கு மேலத்தெருவில் உள்ள குடிகாத்த மாரியம்மன் கோயிலுக்குச் சொந்... மேலும் பார்க்க

கடைகளை அகற்ற வணிகா்கள் எதிா்ப்பு

தஞ்சாவூா் அருகே புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் பகுதியில் கடைகளை அகற்ற வந்த நீதிமன்ற ஊழியா்களுக்கு வணிகா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் அருக... மேலும் பார்க்க