செய்திகள் :

லெவண்டாவ்ஸ்கி உடனான மோதல்: போலந்து அணி தலைமைப் பயிற்சியாளர் ராஜிநாமா!

post image

போலந்து கால்பந்து அணியில் உள்ள வீரருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அந்த அணியின் பயிற்சியாளர் ராஜிநாமா செய்துள்ளார்.

போலந்து கால்பந்து அணிக்காக 2023-இல் இருந்து தலைமைப் பயிற்சியாளராக மைக்கேல் ப்ரோபியர்ஸ் (52) இருந்துவந்தார்.

பார்சிலோனாவின் நட்சத்திர வீரரும் போலந்து நாட்டிற்காக அதிக கோல்கள் (85 கோல்கள்) அடித்தவருமான ராபர்ட் லெவண்டாவ்ஸ்கியை (36) கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு பியோடர் செபாஸ்டியன் ஜீலின்ஸ்கியை நியமித்ததால் இந்தப் பிரச்னை தொடங்கியது.

இந்த நிகழ்வுக்குப் பிறகு லெவண்டாவ்ஸ்கி, “இனிமேல் மைக்கேல் ப்ரோபியர்ஸ் பயிற்சியாளராக இருந்தால் நான் அணியில் விளையாடமாட்டேன்” எனக் கூறினார்.

உலகக் கோப்பைக்குத் தேர்வாகுவதில் சிக்கல்

போலந்து அணி பின்லாந்துடன் 1-2 என தோல்வியை சந்தித்தது. இதனால், உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் புள்ளிப் பட்டியலில் 3-ஆவது இடத்தில் உள்ளது.

ஐரோப்பாவில் உள்ள மொத்த 12 குரூப்பில் முதலிடத்தில் உள்ள 12 அணிகளும் நேரடியாக தகுதிபெறும்.

இதில் 2ஆவது இடத்திலிருக்கும் 12 அணிகளுடன் நேஷன்ஸ் லீக்கில் 4 இடங்களைப் பிடித்த அணிகளுமாக சேர்ந்து 16 அணிகளும் பிளே ஆஃப்ஸ் முறையில் விளையாடி அதில் 4 அணிகள் தேர்வாகும்.

போலந்து அணி முதலிரண்டு இடங்களுக்குள் இந்தச் சுற்றினை முடித்தால் மட்டுமே 2026 உலகக் கோப்பையில் விளையாட முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

ராஜிநாமா செய்த தலைமைப் பயிற்சியாளர்

இந்தச் சூழ்நிலையில், போலந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் மைக்கேல் ப்ரோபியர்ஸ் தனது ராஜிநாமாவை அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர், “போலந்து அணியின் நன்மைக்காக நான் எனது தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன்” எனக் கூறியுள்ளார்.

பொறுப்புணர்வு வேண்டும்

போலந்து கால்பந்து அமைப்பின் தலைவர் செசரி ஆண்ட்ரெஜ் குலேசா, “நான் பயிற்சியாளர்களுக்கு அதிகமான சுதந்திரத்தை அளித்துள்ளேன். ஆனால், அதில் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

நான் எப்போதுமே வெற்றிகளை மட்டுமே முதன்மையானதாகக் கருதுகிறேன். இது போலந்து ரசிகர்களுக்கு கடினமான நாள்களாக இருக்கும்” எனக் கூறினார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: வெற்றியை நோக்கி தென்னாப்பிரிக்கா

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் வெற்றியை நெருங்கியிருக்கிறது தென்னாப்பிரிக்கா. 282 ரன்களை நோக்கி விளையாடி வரும் அந்த அணிக்கு இன்னும் 69 ரன்களே தேவையாகும். தென்னாப்பிரிக்கா இந்த ஆட்டத்தில் வெ... மேலும் பார்க்க

இந்தியாவுடனான மகளிா் டி20: இங்கிலாந்து அணி அறிவிப்பு

இந்திய மகளிா் அணியுடனான டி20 தொடரில் விளையாடவிருக்கும் இங்கிலாந்து மகளிா் அணி, 14 பேருடன் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.உடல் அசௌகா்யம் காரணமாக உள்நாட்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வெடுத்திருந்த பௌலா் சோ... மேலும் பார்க்க

ஃபுளோரியனை ரூ.1,300 கோடிக்கு வாங்க லிவா்பூல் ஒப்புதல்

ஜொ்மனியின் இளம் கால்பந்து வீரா் ஃபுளோரியன் விா்ட்ஸை, பேயா் லெவா்குசென் அணியிடம் இருந்து ரூ.1,352 கோடிக்கு வாங்க லிவா்பூல் அணி ஒப்புக்கொண்டுள்ளது.அந்தத் தொகை முழுமையாக செலுத்தப்படும் நிலையில், இங்கிலா... மேலும் பார்க்க

இன்று இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

எஃப்ஐஹெச் புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவா் அணி, ஆஸ்திரேலியாவுடன் சனிக்கிழமை (ஜூன் 14) மோதுகிறது. புரோ லீக் போட்டியில் தனது ஐரோப்பிய லெக் ஆட்டங்களை விளையாடி வரும் இந்திய அணி, முதல் கட்டமாக நெதா... மேலும் பார்க்க

உலக துப்பாக்கி சுடுதல்: சுருச்சி சிங்குக்கு தங்கம்

ஜொ்மனியில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் சுருச்சி சிங், மகளிருக்கான 10 மீட்டா் ஏா் பிஸ்டல் பிரிவில் வெள்ளிக்கிழமை தங்கப்பதக்கம் வென்றாா். போட்டியில் ஏற்கெனவே 2 வெண்... மேலும் பார்க்க

யுடிடி: இறுதி ஆட்டத்தில் ஜெய்ப்பூா் பேட்ரியாட்ஸ்

இந்தியன் ஆயில் யுடிடி சீசன் 6 இறுதி ஆட்டத்துக்கு முதல் அணியாக ஜெய்ப்பூா் பேட்ரியாட்ஸ் அணி தகுதி பெற்றது. முதல் அரை இறுதி ஆட்டத்தில் தபாங் டெல்லி டிடிசி - ஜெய்ப்பூா் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின. ஆடவா் ஒற... மேலும் பார்க்க