செய்திகள் :

வக்ஃப் சட்டம்: சில விதிகளுக்கு மட்டும் இடைக்காலத் தடை விதித்த உச்சநீதிமன்றம்!

post image

மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு முழுவதுமாக தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் இன்று தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், "வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு முழுவதுமாக தடை விதிக்க எந்த முகாந்திரமும் இல்லை.

எனினும் வக்ஃப் வாரியத்தை உருவாக்க ஒருவர் 5 ஆண்டுகள் இஸ்லாமிய மதத்தைப் பின்பற்ற வேண்டும் என்ற விதிக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. ஒருவர் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுபவரா என்பதைத் தீர்மானிப்பதற்கான விதிகள் வகுக்கப்படும் வரை இந்த விதி நிறுத்தி வைக்கப்படுகிறது.

அதேபோல வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாத 4 பேர் இருக்கலாம், முஸ்லிம் அல்லாதவர்கள் 4 பேருக்கு மேல் இருக்கக்கூடாது. 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்தால் மட்டுமே நிலம் நன்கொடையை அளிக்கலாம்.

இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்ட சில அதிகாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வக்ஃப் என அறிவிக்கப்பட்ட சொத்து, அரசாங்கச் சொத்தா என்பதைத் தீர்மானித்து உத்தரவுகளைப் பிறப்பிக்கும் ஆட்சியரின் அதிகாரம் நிறுத்திவைக்கப்படுகிறது.

தனிப்பட்ட உரிமைகள்பற்றி முடிவெடுக்க ஆட்சியரை அனுமதிக்க முடியாது. இது அதிகாரத்தை மீறும் செயல்.

தீர்ப்பாயத்தால் தீர்ப்பு வழங்கும் வரை 3 ஆம் நபருக்கு உரிமை அளிக்க முடியாது" என்று கூறியுள்ளது.

Waqf Amendment Act 2025: Supreme Court Order On Pleas For Interim Order

ஹைதராபாத்தில் ஒரே இரவில் 245.5 மிமீ மழை! வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேர்!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு பெய்த தொடர் கனமழை காரணமாக அந்த நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஹைதராபாத்தில் நேற்று இரவு 8.30 மணி முதல் இன்று(திங்கள்) காலை ... மேலும் பார்க்க

பஞ்சாபில் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்ட ராகுல்: குருத்வாராவில் வழிபாடு!

பஞ்சாபின் அமிர்தசரஸில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று, இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கலந்துரையாடினார். பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அம்ரீந்தர் சி... மேலும் பார்க்க

மும்பையில் கொட்டித்தீர்த்த கனமழை: சிவப்பு எச்சரிக்கை!

மும்பையில் பல பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழையால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, இந்திய வானிலை ஆய்வு மையம் மும்பைக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மும்பை வானிலை ஆய்வு மையத்தின்... மேலும் பார்க்க

வருமான வரி கணக்கு தாக்கல்: கால அவகாசம் இன்றுடன் நிறைவு!

வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்று (செப். 15) நிறைவடைகிறது.அபராதம் இன்றி ஐடிஆர் தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும். இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பின் பலன் மக்களுக்கு கிடைக்க வேண்டும்: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்!

ஜிஎஸ்டி குறைப்பின் பலன் மக்களைச் சென்றடைய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறினாா். சென்னை பிரஜைகள் மன்றம் சாா்பில் ‘எழுச்சி பெறும் பாரதத்துக்கான வரி சீா்திருத்தம்’ எனும் தலைப்பில... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு: ராகுலை விமா்சிக்கும் முன் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும்! முன்னாள் தோ்தல் ஆணையா் குரேஷி

வாக்குத் திருட்டு சா்ச்சையில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை கடுமையாக விமா்சிக்கும் முன், அவா் சுமத்திய குற்றச்சாட்டுகள் குறித்து இந்திய தோ்தல் ஆணையம் விசாரணை நடத்தியிருக்க வேண்டும் எ... மேலும் பார்க்க