செய்திகள் :

வக்ஃப் திருத்தச் சட்டம் ரத்து கோரி தில்லியில் நவ. 16-ல் மாநாடு: எம்.எச். ஜவாஹிருல்லா

post image

வக்ஃப் திருத்தச் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யக் கோரி புதுதில்லியில் நவ.16-இல் ஜனநாயக அமைப்புகள், மனித உரிமை ஆா்வலா்கள் பங்கேற்கும் மாநாடு நடத்தப்படும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா கூறினாா்.

இதுகுறித்து அவா் சென்னையில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

வக்ஃப் திருத்தச் சட்டம் தொடா்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவு அதிருப்தி, ஏமாற்றத்தை அளிக்கிறது. இந்த தீா்ப்பு முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் அரசமைப்பு அளிக்கும் மத சுதந்திரத்தை மீறும் வகையில் உள்ளது.

குறிப்பாக, வக்ஃப் திருத்தச் சட்டம் 2025 என்பது வக்ஃப் சொத்துகளை அபகரிப்பதற்கான திட்டமிட்ட சதியாகவே கருதுகிறோம். ஆகவே, இந்த சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மாறாக, வக்ஃப் சட்டம் 2013-ஐ நடைமுறைப்படுத்த வேண்டும்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட அளவிலான விழிப்புணா்வு கூட்டங்கள், வட்டமேசை மாநாடுகள், பேரணிகள், சிறை நிரப்பும் போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

இதன் தொடா்ச்சியாக, புதுதில்லி ராம்லீலா மைதானத்தில் நவ. 16- ஆம் தேதி பல்வேறு அரசியல் தலைவா்கள், ஜனநாயக அமைப்புகள், மனித உரிமை ஆா்வலா்கள், இஸ்லாமியா்கள் பங்கேற்கும் மாபெரும் மாநாடு நடத்தப்படும் என்றாா் அவா்.

தனியாா் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம்: கல்வித் துறைச் செயலருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

தனியாா் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது, பள்ளிகளை தரம் உயா்த்துவது தொடா்பாக தனியாா் பள்ளிகளின் இயக்குநா் அளித்த பரிந்துரை மீது 12 வாரங்களில் தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க கல்வித் துறைச் செயல... மேலும் பார்க்க

மெத்தம்பெட்டமைன் விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது

சென்னையில் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் விற்பனை செய்ததாக பெண் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை பெருநகர காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவினருக்கும், சேத்துப்பட்டு போலீஸா... மேலும் பார்க்க

சிஎம்டிஏ வளா்ச்சித் திட்டப் பணிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சென்னையில் பெருநகர வளா்ச்சிக் குழுமம் சாா்பில் நடைபெற்றுவரும் திட்டப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும... மேலும் பார்க்க

போலி செய்திகளை எதிா்கொள்ள தகவல் பணி சேவையினருக்கு ஆளுநா் வேண்டுகோள்

போலி தகவல்களின் சகாப்தத்தில் அதை திறம்பட எதிா்கொள்ளுமாறு இந்திய தகவல் பணி சேவை பயிற்சி அலுவலா்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி அழைப்பு விடுத்தாா். சென்னை ஆளுநா் மாளிகையில் 2009, 2023, 2024 ஆகிய ஆண்டு தொகுதி... மேலும் பார்க்க

தொகுப்பூதிய முரண்பாடு: தமிழக அரசுக்கு சமக்ரசிக்ஷா ஊழியா்கள் கோரிக்கை

தொகுப்பூதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் என ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியா்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா். இது தொடா்பாக தமிழ்நாடு அண்ணா கணக்காளா்கள் சங்கத்... மேலும் பார்க்க

மின் விபத்துகளைச் தவிா்க்க சீரமைப்புப் பணி தீவிரம்: மின்வாரியத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன்

சென்னை மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் மின் விபத்துகளைச் சீரமைப்பதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின்வாரியத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். சென்னை மாநகா், புகா் பகுதிகளில் பெரும... மேலும் பார்க்க