செய்திகள் :

வங்கதேச அணிக்கு புதிய கேப்டன்; அணியின் நலனை பாதிக்குமா?

post image

ஒருநாள் போட்டிகளுக்கான வங்கதேச அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த நஜ்முல் ஹொசைன் ஷாண்டோவுக்குப் பதிலாக, புதிய கேப்டனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.

ஒருநாள் போட்டிகளுக்கான புதிய கேப்டனாக மெஹிதி ஹாசன் மிராஸ் செயல்படுவார் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் நேற்று (ஜூன் 12) அறிவித்தது. மெஹிதி ஹாசன் மிராஸ் அடுத்த ஓராண்டுக்கு அணியின் கேப்டனாக செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: தென்னாப்பிரிக்க டாப் ஆர்டர் ஆஸி. பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்: ரிக்கி பாண்டிங்

அணியின் நலனை பாதிக்குமா?

ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஒருநாள் போட்டிகளுக்கான புதிய கேப்டனை நியமித்துள்ள நிலையில், கேப்டன் பொறுப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் அணியின் நலனை பாதிக்காது என புதிதாக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள மெஹிதி ஹாசன் மிராஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: அணியின் கேப்டனை எவ்வாறு தேர்வு செய்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. அணிக்கான கேப்டனை தேர்ந்தெடுப்பது கிரிக்கெட் வாரியக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். கேப்டன் பொறுப்பு தொடர்பாக தனிப்பட்ட நபரால் எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாது. வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நேற்று என்னை தொலையில் அழைத்துப் பேசினார். அவர்கள் எனக்கு கேப்டன் பொறுப்பை வழங்க உள்ளதாகவும், அவர்களுக்கு அதிக நேரமில்லை எனவும் கூறினார்.

நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ ஒருநாள் போட்டிகளில் நன்றாக விளையாடி வருகிறார். ஆனால், கேப்டன் பொறுப்பில் மாற்றத்தைக் கொண்டு வருவது கிரிக்கெட் வாரியத்தின் முடிவு. கேப்டன் பொறுப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் அணியின் நலனை பாதிக்கும் என நான் நினைக்கவில்லை. நாங்கள் அனைவரும் நாட்டுக்காக விளையாடுகிறோம். கேப்டன் பொறுப்பு மாற்றம் என்னையோ, ஷாண்டோவையோ பாதிக்காது. அவர் கேப்டனாக செயல்பட்டபோது, அவருக்கு நிறைய உதவியுள்ளேன். நான் கேப்டனாக செயல்படும்போது, எனக்கு அவர் உதவி செய்வார். நாங்கள் கிரிக்கெட்டில் வங்கதேசத்தை முன்னோக்கி கொண்டு செல்வோம் என்றார்.

இதையும் படிக்க: இங்கிலாந்து டெஸ்ட் தொடரை நினைத்து பதற்றமாக உள்ளது: இந்திய அணியின் பயிற்சியாளர்

27 வயதாகும் மெஹிதி ஹாசன் மிராஸ் இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலிருந்து அணியைக் கேப்டனாக வழிநடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

டெம்பா என்பதன் பொருள் என்ன தெரியுமா? டெம்பா பவுமா விளக்கம்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி சாம்பியன் பட்டம் வென்றது.ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே லார்ட்ஸ் திட... மேலும் பார்க்க

கேப்டனாக ஆதிக்கம் செலுத்தும் டெம்பா பவுமா!

டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே லார்ட்ஸ் திடலில் நடைபெற்று வந்த உலக டெஸ்ட் சா... மேலும் பார்க்க

முதல் இன்னிங்ஸில் ஜீரோ, இரண்டாவது இன்னிங்ஸில் ஹீரோ; ஆட்ட நாயகன் மார்க்ரம்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி சாம்பியன் பட்டம் வென்றது.ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான உ... மேலும் பார்க்க

முடிவுக்கு வந்த 27 ஆண்டுகள் காத்திருப்பு; தென்னாப்பிரிக்கா சாம்பியன்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி சாம்பியன் பட்டம் வென்றது.282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய தென்னாப்பி... மேலும் பார்க்க

நம்பிக்கை அளிக்கும் மிட்செல் ஸ்டார்க்: இறுதிக் கட்டத்தில் தென்னாப்பிரிக்கா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மிட்செல் ஸ்டார் இன்னமும் நம்பிக்கையை அளிக்கும் விதமாக பந்துவீசி வருகிறார். முதல் இன்னிங்ஸில் ஆஸி. 212க்கு ஆட்டமிழக்க, தெ.ஆ. 138க்கு ஆட்டமிழந்தது.இரண்டாம் இன்னிங... மேலும் பார்க்க

ஷுப்மன் கில் இடத்தில் நான் இருந்தால்... ரவிச்சந்திரன் அஸ்வின் கூறுவதென்ன?

டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஷுப்மன் கில் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார்.இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ட... மேலும் பார்க்க