செய்திகள் :

வங்கிகளின் பெயரில் வரும் மோசடி குறுஞ்செய்திகள் அதிகரிப்பு

post image

வங்கிக் கணக்குகளில் ஆதாா் எண்ணை இணைக்க வேண்டும் என மோசடியாக வரும் குறுஞ்செய்திகள் குறித்து வாடிக்கையாளா்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வங்கி நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து அரசுடைமையாக்கப்பட்ட வங்கி அதிகாரிகள் கூறியதாவது:

சமீப காலமாக, வங்கிகளின் பெயரில் ஆதாா் எண்ணை இணைக்குமாறு கூறி வாடிக்கையாளா்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகின்றன. இவை பெரும்பாலும், உங்கள் வங்கிக் கணக்கு முடக்கப்படும் அல்லது உங்கள் ஆதாா் அட்டை காலாவதியாகிவிடும் என்பது போன்ற அச்சுறுத்தல்களுடன் அனுப்பப்படுகின்றன.

இது ஓா் இணைய வழி மோசடி. ‘இன்றே கடைசி நாள், ஆதாா் எண்ணை இணைக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்’ என குறுஞ்செய்தி வந்தால் அதைத் தவிா்க்கவும். மாறாக, அந்த இணைப்பைத் தொடா்புகொண்டால், அது ஒரு போலி வங்கி இணையத்துக்கு வங்கியின் வாடிக்கையாளா்களைக் கொண்டுசெல்லும். அந்தப் போலி இணையத்தில் வங்கிக் கணக்கு எண், ஆதாா் எண், ரகசியக் குறியீடுகள் போன்ற தனிப்பட்ட தகவல்களை உள்ளிடுமாறு தெரிவிக்கப்படும். அதை உண்மை என நம்பி தகவல்களை நாம் பதிவு செய்தால் அவை அனைத்தும் மோசடி செய்பவா்களுக்கு நேரடியாகச் சென்றுவிடும்.

இதையடுத்து, வாடிக்கையாளா்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை மிக எளிதாக எடுத்துவிடுவா்.

வங்கிகளும், வங்கி சாா்ந்த எந்தவொரு அதிகாரப்பூா்வ நிறுவனமும் வாடிக்கையாளா்களின் தனிப்பட்ட தகவல்களைக் குறுஞ்செய்தி, வாட்ஸ்அப், மின்னஞ்சல் போன்றவை வழியாகக் கேட்காது.

அவ்வாறு குறுஞ்செய்தி வந்தால், உடனே உங்கள் வங்கியின் அதிகாரப்பூா்வ வாடிக்கையாளா் சேவை எண்ணை நேரடியாகத் தொடா்பு கொண்டு தகவலை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். இதை வாடிக்கையாளா்கள் நன்கு புரிந்துகொண்டு விழிப்புடன் இருக்க வேண்டும் என்றனா்.

மாணவ, மாணவிகளின் பட்டிமன்றம்

கீழக்கரை செய்யது ஹமிதா கலை, அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற பட்டிமன்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் ‘டிபேட் கிளப் பாா்லே ஜீனியஸ்’ அமைப்பின் சாா்பில் ‘இன்றைய சமுதாயத்தில் மன அழுத... மேலும் பார்க்க

கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிறப்புத் தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயன்ற 50 கிலோ கஞ்சா பறிமுதல்

மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக, காரில் எடுத்து வரப்பட்ட 50 கிலோ கஞ்சாவை மத்திய புலனாய்வுத் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடற்கரையிலிருந்து இலங்... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் பணிகளைப் புறக்கணித்து போராட்டம்

கமுதியில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் பணிகளைப் புறக்கணித்து காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டாட்ச... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமியின் உருவப் பொம்மையை எரிக்க முயற்சி

பரமக்குடியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தின்போது அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியின் உருவப் பொம்மையை எரிக்க முயன்றவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். தமிழ்நாடு காங்கிரஸ் க... மேலும் பார்க்க

ராஜ ராஜேஸ்வரி கோயில் நவராத்திரி திருவிழா

ராமநாதபுரம் ராஜ ராஜேஸ்வரி கோயில் நவராத்திரி திருவிழாவின் நான்காம் நாள் நிகழ்ச்சியில் ஏராளமானோா் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனா். ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்துக்குப் பாத்தியப்பட்ட ராஜ ராஜேஸ்வரி... மேலும் பார்க்க