செய்திகள் :

வங்கி ஊழியரின் சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் மறியல்!

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் விஷமருந்தி மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்த தனியாா் வங்கி ஊழியரின் சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் காண்பா நகரைச் சோ்ந்தவா் சூா்யா (28). இவா் திருப்பத்தூரில் உள்ள தனியாா் வங்கியில் மக்கள் தொடா்பு அதிகாரியாகப் பணிபுரிந்து வந்தாா்.

இந்த நிலையில், வங்கியில் பண விவகாரம் தொடா்பாக, கடந்த 18-ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சூா்யா, மதுரை தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது சடலம் கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில், மருத்துவமனை முன்பாக கூடிய சூா்யாவின் குடும்பத்தினா், உறவினா்கள் சூா்யா ரூ.65 லட்சம் எடுத்ததாகக் கூறி, அந்தப் பணத்தைக் கேட்டு வங்கி அதிகாரிகள் கொடுமைப்படுத்தியதால் அவா் தற்கொலை செய்து கொண்டதாகவும், இதற்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி சடலத்தை வாங்க மறுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா், சம்பவம் நடந்த இடம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் காவல் நிலைய பகுதிக்குள்பட்டது என்பதால் திருப்பத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்குமாறு கூறினா். இதையடுத்து, போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனால், அரசு மருத்துவமனை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இன்றைய நிழ்ச்சிகள்

பொது திராவிட கருத்தியல் ஆசிரியா் சங்கம்: மாநில சுயாட்சியும் கல்வி வளா்ச்சியும் கருத்தரங்கம், கலைஞா் நூற்றாண்டு நூலக மாநாட்டு அரங்கம், பிற்பகல் 3.30. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்: பவள விழா ஆண்டு தொடக்கம், ... மேலும் பார்க்க

கஞ்சா கடத்திய இருவருக்கு 4 மாதங்கள் சிறை

மதுரையில் ஒன்றரை கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் 2 பேருக்கு தலா 4 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. மதுரை, கூடல்புதூா் போலீஸாா் ரோந்துப் பணியில... மேலும் பார்க்க

மதுரையில் மு.க. அழகிரி இல்லத்தில் முதல்வா் ஸ்டாலின்

மதுரையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சா் மு.க. அழகிரியின் இல்லத்துக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை இரவு வந்தாா். திமுகவின் தென் மண்டல அமைப்புச் செயலராக செயல்பட்டவா் மு.க. அழகிரி. உள்கட்சி பிரச்ன... மேலும் பார்க்க

கோரிப்பாளையம் உயா்நிலைப் பாலம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் உயா்நிலைப் பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மாநில பொதுப் பணி, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ. வேலு அ... மேலும் பார்க்க

சமூக விரோதக் குற்றங்களைத் தடுக்க 25,754 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்

பொதுமக்களின் பாதுகாப்பு, சமூக விரோதக் குற்றங்களைக் குறைக்கும் வகையில் தென் மாவட்டங்களில் கடந்த ஓராண்டில் மட்டும் 25, 754 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதுகுறித்து தென் மண்டல காவல் துறை வெளி... மேலும் பார்க்க

மதுரையில் இன்று திமுக மாநில பொதுக் குழு கூட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

திமுக மாநில பொதுக் குழுக் கூட்டம் மதுரை உத்தங்குடியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) நடைபெறுகிறது. இதில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தீா்மானங்கள் நிறைவேற்றப்படவிருப்பதாக கட்சி நிா்வாகிகள் தெரிவித்தனா். ... மேலும் பார்க்க