செய்திகள் :

வங்க மொழி சர்ச்சை: நீண்ட பதாகைகளுடன் போராடிய கால்பந்து ரசிகர்கள்!

post image

தில்லி காவல் துறையின் வங்கதேச மொழி சர்ச்சைக்கு ஈஸ்ட் பெங்கால் கால்பந்து ரசிகர்கள் மிகப்பெரிய பதாகைகளை காண்பித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

மத்திய உள்துறை அமைச்சரவையின்கீழ் இயங்கும் தில்லி காவல் துறை வங்காள மொழியை ’வங்கதேச மொழி’ எனக் குறிப்பிட்டிருந்தது.

நம் நாட்டுப்பண் இயற்றப்பட்ட வங்க மொழிக்கு இழைக்கப்பட்டுள்ள நேரடி அவமதிப்பு என தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கொல்கத்தாவில் டூரண்டு கோப்பை போட்டியில் ஈஸ்ட் பெங்கால் - நம்தாரி அணிகளுக்கான போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஈஸ்ட் பெங்கால் 1-0 என வென்றது.

சுதந்திரத்திற்காக போராடிய நாங்கள் வங்கதேசத்தினரா?

இந்தப் போட்டியின்போது ஈஸ்ட் பெங்கால் ரசிகர்கள் மிகப்பெரிய பதாகைகளை வைத்து பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்தார்கள்.

அந்தப் பதாகையில், “நாங்கள் சுதந்திரத்துக்காக துக்கில் தொங்கினோம். தற்போது, எங்களது தாய்மொழியைப் பேசுவதால் வங்கதேசத்தவர் (பங்களாதேஷி) என்று அழைக்கப்படுகிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக வலைதளத்தில் இந்தப் பதாகைகள் வைரலாகி வருகிறது. மேற்கு வங்காளத்தில் இடம்பெயர்ந்தோர்கள் பலரும் குறிவைக்கப்படுவதாக திரிணமூல் காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.

தில்லி காவல்துறையில் கடிதத்திற்கு மமதா பானர்ஜி, ”அவதூறான, அவமதிக்கும், தேச விரோதமான, அரசியலமைப்பிற்கு விரோதமானது செயல்” எனக் கண்டனம் தெரிவித்திருந்தார்.

ஈஸ்ட் பெங்கால் கால்பந்து அணி

கொல்கத்தாவில் மிகவும் பிரபலமான ஈஸ்ட் பெங்கால் கால்பந்து அணி 1920 ஆண்டு உருவாக்கப்பட்டது.

நூற்றாண்டைக் கடந்த இந்த கால்பந்து அணி டூரண்ட் கோப்பையில் 16 முறை கோப்பை வென்று இரண்டாம் இடத்தில் உள்ளது. மோகன் பகான் 17 முறை வென்றுள்ளது.

மொழி சர்ச்சைக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்த இவர்களது செயல் இந்தியா முழுவதும் எதிரொலித்து வருகிறது.

கடந்தாண்டு கொல்கத்தாவில் நிகழ்ந்த மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமையால் நிகழ்ந்த மரணத்துக்கு போட்டியாளர்களான ஈஸ்ட் பெங்கால் கால்பந்து அணி, மோகன் பகான் அணி ரசிகர்கள் இணைந்து போராடியது குறிப்பிடத்தக்கது.

பரபரக்கும் மகாதேவபுரா தொகுதி! ராகுல் சொல்வது என்ன?

மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் வாக்காளர் பட்டியலில் போலியான பெயர்கள் சேர்க்கப்பட்டு, மிகப்பெரிய அளவில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டியிருக்கும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, அதற்க... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு: வீட்டு எண் பூஜ்யம், ஒரே முகவரியில் 45 பேர்.. குற்றச்சாட்டுகளை அடுக்கிய ராகுல்!

தேர்தல் ஆணையம், மத்திய அரசுடன் இணைந்துகொண்டு வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாகவும், நாட்டின் நலனுக்கு எதிரான குற்றச்செயலில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டிருக்கிறது என்றும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருக்கிறார... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு! சான்றுகளுடன் ராகுல் சரமாரி குற்றச்சாட்டு!

இந்தியாவில் நடைபெற்ற வாக்குத் திருட்டு குறித்த சான்றுகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை வெளியிட்டார்.மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குத் திருட்டு நடைபெற்றதாகவும் வாக்... மேலும் பார்க்க

திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை!

திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.• தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.• தென்னிந்திய பகுத... மேலும் பார்க்க

25% தாங்காது! மேலும் 25 சதவிகிதமா? டிரம்ப் வரியால் அடிவாங்கும் ஆடைகள், கடல் உணவுகள்... மேலும் என்னென்ன?

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த முன்வராததால், இந்தியாவுக்கு அறிவித்த வரியை 25 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தி அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருக்கிறார். ஆனால், இந்திய பொருள்க... மேலும் பார்க்க

குவஹாத்தி சர்வதேச விமான முனையம் நவம்பரில் திறப்பு!

குவஹாத்தி விமான நிலையத்தின் சர்வதேச முனையம் இந்தாண்டு நவம்பரில் பயணிகளுக்காகத் திறக்கப்படும் என அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.புதிய முனையத்தின் கட்டுமானப் பணிகளைப் புதன்கிழமை ... மேலும் பார்க்க