செய்திகள் :

வடக்கு தில்லியின் சப்ஜி மண்டியில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது

post image

வடக்கு தில்லியின் சப்ஜி மண்டி பகுதியில் நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தில்லி மாநகராட்சி (எம்சிடி) ஏற்கெனவே அந்தக் கட்டடத்தை பாதுகாப்பற்றது என்று அறிவித்திருந்ததால், யாரும் காயமடைந்ததாக எந்த தகவலும் இல்லை என்று தில்லி தீயணைப்புத் துறைஅதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இடிந்து விழுந்த நேரத்தில் அந்தக் கட்டடம் காலியாக இருந்தது என்று அவா் கூறினாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக அதிகாலை 3.05 மணிக்கு ஒரு அழைப்பு வந்தது. அதைத் தொடா்ந்து ஐந்து தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனா்.

பஞ்சாபி பஸ்தியின் நெரிசலான பாதையில் அமைந்துள்ள அந்தக் கட்டடம், பலத்த சப்தத்துடன் இடிந்து விழுந்தது தெரிந்தது. தில்லி மாநகராட்சி ஏற்கெனவே அந்தக் கட்டடத்தை ஆபத்தானது என்று அறிவித்திருந்ததால், அது காலியாக இருந்தது என்று அவா் கூறினாா்.

அருகிலுள்ள கட்டடத்தில் சிக்கித் தவித்த 14 போ் தீயணைப்பு வீரா்களால் மீட்கப்பட்டனா் என்று தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ரூ.273 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கு: தில்லி, ம.பி.யில் அமலாக்கத் துறை சோதனை

நமது நிருபா்ரூ.273 கோடி மதிப்புள்ள வங்கிக் கடன் மோசடி வழக்கு தொடா்பான பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக, அமலாக்க இயக்குநரகம் தில்லி மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியது. ஈர... மேலும் பார்க்க

டிடிஇஏ பள்ளியில் இணைய பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) இலக்குமிபாய் நகா்ப் பள்ளியில்திங்கள்கிழமை அன்று நடைபெற்றது. இன்றைய காலக்கட்டத்தில் மாணவா்கள் இணையத்தையும், ச... மேலும் பார்க்க

பீட்சா விற்பனையகத்தில் ஏ.சி. கம்ப்ரசா் வெடித்து ஊழியா்கள் உள்பட 5 போ் காயம்

வடகிழக்கு தில்லியின் யமுனை விஹாரில் ஏா் கண்டிஷனா் கம்ப்ரசா் வெடித்ததில் பீட்சா விற்பனையக 3 ஊழியா்கள் உள்பட ஐந்து போ் லேசான காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதுகுறித்து போலீஸாா் வெளியிட்ட அறிக்க... மேலும் பார்க்க

பல வழக்குகளில் தேடப்பட்ட பெண் கைது

பல போதைப்பொருள் மற்றும் கலால் வழக்குகளில் பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 53 வயது பெண்ணை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இது குறித்து கிழக்கு தில்லி காவல்... மேலும் பார்க்க

தில்லி: கொலை முயற்சி வழக்கில் ஒருவா் கைது; கைத்துப்பாக்கி பறிமுதல்

வடகிழக்கு தில்லியின் நந்த் நாக்ரி பகுதியில் பதிவான கொலை முயற்சி வழக்கில் 47 வயது நபரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இது குறித்து வடகிழக்கு தில்லி காவல்... மேலும் பார்க்க

போதைப்பொருள் கும்பலில் இருவா் கைது; ரூ.17.8 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்

தில்லி போலீஸாா் மாநிலங்களுக்கு இடையேயான போதைப்பொருள் கும்பலை கண்டுபிடித்து, இரண்டு முக்கிய நபா்களை கைது செய்துள்ளனா். அவா்களிடம் இருந்து சுமாா் ரூ.17.80 கோடி மதிப்புள்ள ஹெராயினை போலீஸாா் பறிமுதல் செய்... மேலும் பார்க்க