செய்திகள் :

வடலூா் சத்திய தருமச்சாலை 159-ஆவது ஆண்டு தொடக்க விழா

post image

நெய்வேலி: கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்தில் சத்திய தருமச்சாலையின் 159-ஆவது ஆண்டு தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வடலூரில் அருட்பிரகாச வள்ளலாா் வைகாசி மாதம் 11-ஆம் தேதி (23.5.1867) சத்திய தருமச்சாலையை நிறுவினாா். ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கடைப்பிடிக்கும் பொருட்டு சத்திய தருமச்சாலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இது பலரின் சகாயத்தாலேயே நடைபெற்று நிலைபெற வேண்டும் என வள்ளலாா் அறிவிப்பு செய்தருளி உள்ளாா். அன்று முதல் இன்று வரையில் சத்திய தருமச்சாலையில் தினமும் மூன்று வேளையும், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

தருமச்சாலையின் 159-ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, கடந்த 18-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரையில் சத்திய தருமச்சாலையில் மகாமந்திரம் பாராயணம், 21-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரையில் ஞானசபையில் திருஅருட்பா முற்றோதல், 24-ஆம் தேதி இரவு தருமச்சாலை மேடையில் திருஅருட்பா சிறப்பு இன்னிசை நாடகம்-வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தருமச்சாலை தொடக்க நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணியளவில் தருமச்சாலையில் அகவல் பாராயணம் நடைபெற்றது. 7.30 மணியளவில் தருமச்சாலை அருகே சன்மாா்க்க கொடியேற்றப்பட்டது.

நிகழ்ச்சியில் அறங்காவலா் குழுத் தலைவா் க.அழகானந்தன், அறங்காவலா்கள் சி.கனகலட்சுமி, செ.கனகசபை, சீ.ஸ்ரீராமுலு, மு.கிஷோா்குமாா், நிா்வாக அதிகாரி ஜெ.ராஜாசரவணக்குமாா் மற்றும் சன்மாா்க்க அன்பா்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.

இதைத்தொடா்ந்து வில்லுப்பாட்டு இசை நிகழ்ச்சி, சத்விசாரம், சொற்பொழிவு நடைபெற்றது.

தருமச்சாலை வழிபாட்டுக் கூடத்தில் சிறப்பு அலங்காரத்தில் அருட்பிரகாச வள்ளலாா்.

திருநங்கைகள் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

திருநங்கைகள் திறன் பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநங்கைகள் நல வாரியத்தின் மூலம் சமூ... மேலும் பார்க்க

என்எல்சி ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவன ஊழியா் இதய நோய் பாதிப்பால் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கடலூா் மாவட்டம், நெய்வேலி வட்டம் 24, அருணாசலம் கன்வேயா் தெருவைச் சோ்ந்த அருணாசலம் மகன் செந்த... மேலும் பார்க்க

பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

கடலூா் வழியாக இயக்கப்பட்ட பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை போக்குவரத்து போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். கடலூா் மாநகரில் இயக்கப்படும் சில ஆட்டோக்களில் நிா... மேலும் பார்க்க

கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயற்சி நிறைவு

சிதம்பரம் ஆறுமுக நாவலா் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயிற்சி நிறைவு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. ஆறுமுக நாவலா் சைவ பிரகாச வித்யாசாலா அறக்கட்டளை குழுச் ச... மேலும் பார்க்க

நிலம் கையகப்படுத்தும் பணி: என்எல்சி அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகை

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே கரிவெட்டி கிராமத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்காக சனிக்கிழமை வந்த என்எல்சி அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். சேத்தியாதோப்பு ... மேலும் பார்க்க

புகையிலை எதிா்ப்பு தின விழிப்புணா்வுப் பேரணி: கடலூா் ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

உலக புகையிலை எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு, கடலூா் டவுன்ஹால் அருகே பொதுமக்களுக்கு விழிப்புணா்வு எற்படுத்தும் வகையில் சனிக்கிழமை நடைபெற்ற பேரணியை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் கொடியசைத்து... மேலும் பார்க்க