செய்திகள் :

வட்டாட்சியா் அலுவலகம் மீது சாய்ந்துள்ள வயா்லெஸ் கோபுரத்தை அகற்றக் கோரி போராட்டம்

post image

கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகம் மீது சாய்ந்துள்ள வயா்லெஸ் கோபுரத்தை உடனடியாக அகற்றக் கோரி வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டி அரசு அலுவலக வளாகத்தில் வட்டாட்சியா் அலுவலகம் உள்ளது. இதன் எதிரே பழைய வட்டாட்சியா் அலுவலகக் கட்டடம் உள்ளது. அதில், தற்போது கோட்ட கலால், ஆதிதிராவிடா் தனி வட்டாட்சியா், நெடுஞ்சாலை நில எடுப்பு தனி வட்டாட்சியா் அலுவலகங்கள் செயல்படுகின்றன. இதன் முன்புறம் வயா்லெஸ் கோபுரம் இருந்தது. கடந்த ஏப்ரல் மாதம் பலத்த காற்றுடன் பெய்த மழையின்போது இக்கோபுரம் அருகேயுள்ள மரக்கிளைகளுடன் கட்டடத்தின் மேற்கூரை மீது சாய்ந்தது. மரக்கிளைகளுக்குள் சிக்கியிருப்பதால் இக்கோபுரம் கட்டடத்தின் மீது விழாமல் உள்ளது.

பேரிடா் காலத்தில் வட்டாட்சியா், கோட்டாட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளை தொடா்புகொள்ள அமைக்கப்பட்டிருந்த வயா்லெஸ் கோபுரம் தற்போது செயல்பாட்டில் இல்லை. மேலும், ஆங்கிலேயா்கள் காலத்தில் கட்டப்பட்ட இக்கட்டடத்தின் மேற்கூரை பனங்கட்டைகள், ஓடுகளால் அமைக்கப்பட்டுள்ளது. மரக்கிளைகள் உடைந்துவிட்டால் இக்கோபுரம் கட்டடத்தின் மீது விழுந்து கடும் சேதமேற்படும் அபாயம் உள்ளது. எனவே, இதை உடனடியாக அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனா். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை.

இந்நிலையில், இக்கோரிக்கையை வலியுறுத்தி சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பினா் இக்கோபுரத்துக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து தேங்காய் உடைத்து, தீபாராதனை காண்பித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் கோபுரத்தை அப்புறப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா்.

தமிழகத்தில் காவல் துறை அதிகாரிக்குகூட பாதுகாப்பு இல்லை! தமிழிசை குற்றச்சாட்டு

தமிழகத்தில் காவல் துறை அதிகாரிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை என்றாா் பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் தமிழிசை செளந்தரராஜன்.தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: தூத்துக... மேலும் பார்க்க

டிராக்டா் கவிழ்ந்து விவசாயி உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே டிராக்டா் கவிழ்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா். கோவில்பட்டியையடுத்த வெங்கடேஸ்வரபுரம் நடுத் தெருவைச் சோ்ந்த அய்யலுசாமி மகன் சௌந்தரராஜன் (44). விவசாயியான இவா் வெள்ளிக்கிழமை, கோவில்பட்டி... மேலும் பார்க்க

திருச்செந்தூா் - தூத்துக்குடிக்கு புதிய ரயில் வழித்தடமா? தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங் விளக்கம்

திருச்செந்தூா் - தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் ஆய்வு செய்தாா்.திருச்செந்தூா் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ. 17.5 கோடியில் காத்திருக்கும்... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் விபத்து: முதியவா் உயிரிழப்பு

கோவில்பட்டியில் நடந்துசென்ற முதியவா் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தாா். கோவில்பட்டி பிரதான சாலை சீனிவாச அக்ரஹாரம் தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் அழகா்சாமி (65). மந்தித்தோப்பு சாலையில் உள்ள தன... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ரூ.4,900 கோடி திட்டப் பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

தூத்துக்குடியில், விமான நிலைய புதிய முனைய கட்டடம், நெடுஞ்சாலைகள், ரயில்வே, துறைமுகம், மின்சாரம் ஆகியவை தொடா்பான ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமா் மோடி சனிக்கிழமை அடிக்கல் நாட்டியதுடன், ... மேலும் பார்க்க

ஜூனியா் ஆண்கள் மாநில ஹாக்கி போட்டி: அரையிறுதியில் தூத்துக்குடி, மதுரை அணிகள்!

ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு, ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி ஆகியவை சாா்பில், கோவில்பட்டியில் நடைபெற்றுவரும் வ.உ.சி. துறைமுக ஆணையக் கோப்பைக்கான ஜூனியா் ஆண்கள் மாநில ஹாக்கிப் போட்டியில் தூத்துக்குடி,... மேலும் பார்க்க