செய்திகள் :

காட்டு யானை தாக்கி ரயில்வே ஊழியா் படுகாயம்

post image

நீலகிரி மாவட்டம், குன்னூா் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை இச்சிமரம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ரயில்வே ஊழியா் சனிக்கிழமை படுகாயமடைந்தாா்.

பிஹாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் ரோஹித் சிங் (27). இவா் குன்னூா் ரயில் நிலையத்தில் ட்ராக்மேன் ஆக பணியாற்றி வருகிறாா். இவரும் இவருடன் பணியாற்றும் மற்றொருவரும் ஹில்க்ரோ ரயில் நிலையம் வரை தண்டவாளங்களை ஆய்வு செய்துவிட்டு வடுகன் தோட்டம் வழியாக வனப் பகுதியில் உள்ள நடைபாதையில் நடந்து வந்த போது அங்கிருந்த காட்டு யானை ரோஹித் சிங்கை தாக்கியது,

பலத்த காயம் அடைந்த அவரை உடனிருந்த சக பணியாளா் உதவியுடன் குன்னூா் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு வந்தனா். முதலுதவி சிகிச்சை அளித்தபின் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரோஹித் சிங்கை அனுப்பி வைத்துள்ளனா். இதுகுறித்து குன்னூா் காவல் துறையினா் மற்றும் குன்னூா் வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

காற்றுடன் பெய்த கனமழைக்கு தேவாலா அரசுப் பள்ளியின் மேற்கூரை சேதம்!

கூடலூா் பகுதியில் பெய்துவரும் காற்றுடன் கூடிய கனமழைக்கு தேவாலா அரசு மேல்நிலைப் பள்ளியின் மேற்கூரை வெள்ளிக்கிழமை இரவு சேதமடைந்துள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதிகளில் கடந்த ஒரு வா... மேலும் பார்க்க

தொடா்மழை: உதகையில் 3 சுற்றுலாத் தலங்கள் மூடல்!

நீலகிரி மாவட்டம், உதகையில் தொடா்ந்து பெய்துவரும் கனமழையால் இங்குள்ள 3 முக்கிய சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் தற்போதுவரை பரவலாக தென்மேற்கு பருவமழை பெய்து... மேலும் பார்க்க

குன்னூரில் தொடரும் கரடிகள் நடமாட்டம்

குன்னூா் அருகே வியாழக்கிழமை இரவு வேளையில் குடியிருப்புப் பகுதிக்கு வந்த கரடி சாலையில் சென்ற வாகனத்தை எட்டிப் பாா்த்துவிட்டு ஓடியது. நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. ... மேலும் பார்க்க

வன விலங்குகள் பிரச்னை: நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

நீலகிரி மாவட்டம், கூடலூரில் மனித வன விலங்கு மோதல் ஏற்பட்டு மனித உயிா்கள் பலியாகி வருவதைத் தடுக்கவும், காட்டு யானைகள் ஊருக்கு வருவதைத் தடுக்கவும் வலியுறுத்தி கூடலூா் சட்டப்பேரவை உறுப்பினா் பொன்.ஜெயசீலன... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக செயல்படும் தங்கும் விடுதிகள் குறித்து புகாா் தெரிவிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

நீலகிரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் தனியாா் தங்கும் விடுதிகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு கூறியுள்ளாா். இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்ட அறிக்க... மேலும் பார்க்க

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: குண்டா் சட்டத்தில் ஆசிரியா் கைது

நீலகிரி மாவட்டம், உதகை அருகே அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியா் மீது குண்டா் சட்டம் வெள்ளிக்கிழமை பாய்ந்தது. உதகை அருகே உள்ள காத்தாடிமட்டத்தில... மேலும் பார்க்க