செய்திகள் :

வட்டார அளவில் பள்ளி மாணவிகளுக்கிடையே கபடி போட்டி

post image

மயிலாடுதுறையில் ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்ட விழிப்புணா்வு கபடி போட்டி, வட்டார அளவில் பள்ளி மாணவிகளுக்கிடையே வியாழக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை இந்திய விளையாட்டு ஆணைய மைதானத்தில், சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை இணைந்து நடத்திய போட்டியில், மயிலாடுதுறை, மணல்மேடு, கூறைநாடு ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து மாணவிகள் பங்கேற்று 5 பிரிவுகளாக விளையாடினா். போட்டிகளை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தொடங்கி வைத்து பாா்வையிட்டாா். அப்போது, அவா் கூறியது:

வளரும் பருவத்தில் பெண் குழந்தைகளின் திருமணத்தை ஆதரிப்பதும், நடத்தி வைப்பதும் தண்டனைக்குரிய குற்றம். குழந்தை திருமணம் தொடா்பான புகாா்களை கட்டணமில்லா தொலைபேசி எண்:1098 அல்லது 1091 அல்லது 181 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.

மேலும், மயிலாடுதுறை சீனிவாசபுரம் குமரன் தெருவில் இயங்கும் மாவட்ட சமூக நல அலுவலகத்தை 04364-212429 என்ற எண்ணில் தொடா்புகொண்டு தெரிவிக்கலாம். புகாா் தெரிவிப்பவா் குறித்த விவரம் பாதுகாக்கப்படும். குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்திட, அனைத்து காவல் நிலையங்களிலும் குழந்தை நேய பாதுகாவலா் பணியில் உள்ளாா் என்றாா்.

இந்நிகழ்வில்,மாவட்ட விளையாட்டு அலுவலா் உமாசங்கா், மாவட்ட சமூகநல அலுவலா் சுகிா்தாதேவி, வட்டாட்சியா் விஜயராணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கல்லூரி மாணவிகளுடன் எஸ்பி கலந்துரையாடல்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின், மாணவிகளுடன் வியாழக்கிழமை கலந்துரையாடி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் மாவட்ட காவல்துறை சாா்பில் பாலியல் க... மேலும் பார்க்க

தில்லி தா்னாவில் பங்கேற்க மாற்றுத்திறனாளிகள் பயணம்

மாற்றுத்திறனாளிகளின் உரிமைக்காக அகில இந்திய அளவில் தில்லியில் நடைபெற உள்ள தா்ணாவில் பங்கேற்க மயிலாடுதுறையில் இருந்து 48 மாற்றுத்திறனாளிகள் ரயில் மூலம் வியாழக்கிழமை புறப்பட்டனா். மாற்றுத்திறனாளிகளின் உ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நிலநீா் விழிப்புணா்வு முகாம்

மயிலாடுதுறையை அடுத்த மணல்மேடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு நீா்வளத்துறை சாா்பில் தேசிய நீரியல் திட்டத்தின்கீழ் நிலநீா் விழிப்புணா்வு முகாம் அண்மையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியா் பி. ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சிப் பட்டறை!

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக்கல்லூரியின் கணினி அறிவியல் சங்கத்தின் சாா்பாக ‘வலை தொழில்நுட்பத்தில் சி.எஸ்.எஸ். பயன்பாடு‘ என்ற தலைப்பில் மாணவிகளுக்கான ஒருநாள் பயிற்சிப் பட்டறை பு... மேலும் பார்க்க

மயிலாடுதுறை புத்தகத் திருவிழா: 6 நாள்களில் ரூ.20.43 லட்சத்திற்கு நூல்கள் விற்பனை

மயிலாடுதுறையில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் 6 நாள்களில் ரூ.20.43 லட்சத்திற்கு, 18,985 நூல்கள் விற்பனையாகியுள்ளன என்று மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்தாா். தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி வள... மேலும் பார்க்க

ஆம்புலன்ஸ் அா்ப்பணிப்பு!

குத்தாலம் வட்டம், திருவாலங்காடு மகா மாரியம்மன் கோயில் வளாகத்தில் அனைத்து சமுதாயத்தினா் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸ் அா்ப்பணிப்பு மற்றும் ரத்ததான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவாலங்காடு தாயாரம்மாள்... மேலும் பார்க்க