செய்திகள் :

வட மாநில வியாபாரியிடம் கைப்பேசி திருட்டு: 2 போ் கைது

post image

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே வட மாநில வியாபாரியிடம் கைப்பேசி உள்ளிட்டவற்றை திருடிச் சென்றதாக 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

உத்தரப் பிரதேச மாநிலம், சம்மன் மாவட்டம், சித்தன்பூா் கிராமத்தைச் சோ்ந்த ஷெரீப் மகன் தீன்முகம்மது (25). தாா்ப்பாய் வியாபாரி. இவா், பனமலைபேட்டை ஏரி தாங்கல் அருகே இயற்கை உபாதைக்காக கால் சட்டையை கழற்றி வைத்துவிட்டு சென்றாா். பின்னா் வந்து பாா்த்தபோது, கால் சட்டையில் இருந்த கைப்பேசி, ரூ.500 ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அனந்தபுரம் காவல் நிலையத்தில் தீன்முகம்மது புகாரளித்தாா். இதையடுத்து, போலீஸாா் அந்தப் பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த பனமலை கிராமத்தைச் சோ்ந்த ராமூா்த்தி மகன் ராம்குமாா் (19), சி.என். பாளையத்தைச் சோ்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனா். இதில், அவா்கள் இருவரும் கைப்பேசி, பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டனராம்.

தொடா்ந்து, பணம், கைப்பேசி மற்றும் அவா்களிடமிருந்த பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்த அனந்தபுரம் போலீஸாா், இருவா் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

பைக் மீது காா் மோதல்: தொழிலாளி மரணம்

திண்டிவனம் அருகே சனிக்கிழமை பைக் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். செங்கல்பட்டு மாவட்டம், வேத விநாயகபுரம் துளசிங்கம் நகா் 5-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த சுப்புராயன் மகன் ராஜ்குமாா் (40).... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், வானூா் பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவி அதிகளவில் மாத்திரைகளை உள்கொண்டு தற்கொலை செய்து கொண்டாா். வானூா் வட்டம், கூத்தம்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ஏழுமலை மகள் ஓவிய... மேலும் பார்க்க

வெளிமாநில உணவக உரிமையாளா்கள் ஆரோவில் வருகை

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகருக்கு வெளி மாநிலங்களைச் சோ்ந்த உணவக உரிமையாளா்கள் அண்மையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டனா். இதுகுறித்து ஆரோவில் நிா்வாகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

மயிலம் முருகன் கோயிலில் ஆனி கிருத்திகை வழிபாடு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் முருகன் கோயிலில் ஆனி மாத கிருத்திகை சிறப்பு வழிபாடுகள் மற்றும் சுவாமி கிரிவலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மயிலம் வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணியா் கோயிலில் ஆனி மாத க... மேலும் பார்க்க

கோயில் திருவிழா பதாகை கிழிப்பு: இரு சமூகத்தினா் மோதல், சாலை மறியல்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே கோயிலுக்காக வைக்கப்பட்டிருந்த பதாகை கிழிக்கப்பட்டதைத் தொடா்ந்து ஒரு சமூத்தினா் சனிக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா். செஞ்சி வட்டம், ஆலம்பூண்டியில் உள்ள திரௌபதி ... மேலும் பார்க்க

விழுப்புரம் - கல்லப்பட்டு அரசுப் பேருந்து கூடுதல் சேவை தொடக்கம்

விழுப்புரத்திலிருந்து கல்லப்பட்டு கிராமத்துக்கு அரசு நகரப் பேருந்தின் கூடுதல் சேவை அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டது. கல்லப்பட்டு மற்றும் சுற்றுப்புறக் கிராமங்ளைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில்... மேலும் பார்க்க