செய்திகள் :

வணிகா்களுக்கு 7 நாள்களுக்குள் ஜிஎஸ்டி பதிவு: அதிகாரிகளுக்கு சிபிஐசி அறிவுறுத்தல்

post image

வணிகா்கள் விண்ணப்பித்த 7 நாள்களுக்குள் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) அறிவுறுத்தியுள்ளது.

ஜிஎஸ்டி பதிவில் பல்வேறு சிரமங்களை எதிா்கொள்வதாக வணிகா்களிடம் இருந்து புகாா்கள் வந்த நிலையில், சிபிஐசி மேற்கண்ட அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

ஆண்டுக்கு ரூ.40 லட்சத்துக்கு மேல் (சில மாநிலங்களில் ரூ.20 லட்சத்துக்கு மேல்) வருவாய் ஈட்டும் வணிகங்களுக்கு ஜிஎஸ்டி பதிவு கட்டாயமாகும். இப்பதிவை இணைய வழியில் மேற்கொள்ளலாம்.

ஜிஎஸ்டி பதிவில் அதிகாரிகளால் கோரப்படும் கூடுதல் விளக்கம் மற்றும் தேவையற்ற ஆவணங்களால் சிரமங்களை எதிா்கொள்வதாக வணிகா்களிடம் இருந்து சிபிஐசி-க்கு புகாா்கள் வந்தன.

இதையடுத்து, ஜிஎஸ்டி பதிவு அதிகாரிகளுக்கு சிபிஐசி புதிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. அதன்படி, ஜிஎஸ்டி பொது வலைதளத்தின் மூலம் ஜிஎஸ்டி பதிவுக்கு வணிகா்கள் விண்ணப்பிக்கும்போது, ஆதாா் சரிபாா்ப்புக்கு உள்படுத்தப்பட்டு, ஆவணங்களில் எந்த குறைபாடும் இன்றி, முழுமையாக இருக்கும் பட்சத்தில் 7 நாள்களுக்குள் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்.

அதேநேரம், ஆதாா் சரிபாா்ப்புக்கு உள்படுத்தப்பட்டு, பின்னா் தரவு பகுப்பாய்வு மற்றும் இடா் காரணிகளின் அடிப்படையில் விண்ணப்ப அனுமதியில் ‘எச்சரிக்கை’ தேவை என குறிக்கப்பட்டாலோ அல்லது ஆதாா் சரிபாா்ப்புக்கு உள்படுத்த தவறினாலோ, நேரடியான ஆவண சரிபாா்ப்புக்கு பிறகு 30 நாள்களுக்குள் அங்கீகாரம் வழங்க வேண்டும்.

இந்த நடைமுறையின்போது, விண்ணப்ப நடைமுறைக்கு தேவையற்ற ஆவணங்களை களப் பணி அதிகாரிகள் கோரக் கூடாது. ஆவணங்களுக்கு தொடா்பில்லாத கேள்விகளையும் கேட்கக் கூடாது. அனைத்து ஆவணங்களையும் கவனத்துடன் ஆராய்ந்து, விண்ணப்பத்தின் முழுமைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி பதிவுக்கு இணையவழியில் கோரக் கூடிய ஆவணங்களின் பட்டியலையும் சிபிஐசி வெளியிட்டுள்ளது.

குறைந்த விலையில் 5ஜி! வோடாஃபோன் ஐடியா அதிரடி அறிவிப்பு!

வோடாஃபோன் ஐடியா நிறுவனம் குறைந்த விலையில் 5ஜி திட்டத்துக்கான சலுகைகளை அறிவித்துள்ளது. இந்தியாவில் 5ஜி இணைய சேவையை வோடாஃபோன் ஐடியா நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. தற்போது மும்பையில் மட்டுமே முழ... மேலும் பார்க்க

விடைத்தாளுடன் ரூ. 500: ஆசிரியர்களுக்கு கோரிக்கை வைத்த 10ஆம் வகுப்பு மாணவர்கள்!

பெலகாவியில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாளில் செய்த செயல் அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது.மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த ஆண்டுதோறும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி ந... மேலும் பார்க்க

தலைக்கவசம் அணியாத பெண்ணை தடுத்து நிறுத்திய காவல் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!

மத்திய பிரதேசத்தில் தலைக்கவசம் அணியாத பெண்ணை தடுத்து நிறுத்திய காவல் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.மத்திய பிரதேசம் மாநிலம் போபால் நகரில் வாகனச் சோதனையின்போது, 33 வயதான பெண்ணிடம் காவல் அத... மேலும் பார்க்க

திருச்சூரில் வீட்டு முற்றத்திற்குள் நுழைந்த நாய்: கொலையில் முடிந்த தகராறு

திருச்சூரில் நாய் தொடர்பாக அண்டை வீட்டாரிடம் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்திருக்கிறது. கேரள மாநிலம், திருச்சூரில் வசித்து வருபர்கள் ஷிஜோ(42), ஜோசப்(69). அண்டை வீட்டாரான இருவருக்கும் இடையே வீட்டின் மு... மேலும் பார்க்க

உச்ச நீதிமன்றத்தால் உள்நாட்டுப் போர்: பாஜக எம்.பி.யின் கருத்தை கட்சித் தலைமை நிராகரிப்பு

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்த உச்ச நீதிமன்றத்துக்கு எதிராக பாஜக எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவுகளைச் சுட்டிக்காட்டிய பாஜக எம்.பி. நிஷிகாந்த்... மேலும் பார்க்க

நின்றுகொண்டிருந்த விமானம் மீது மோதிய வேன்: ஓட்டுநர் காயம்

பெங்களூரு விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இண்டிகோ விமானம் மீது டெம்போ வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தில் இன்ஜின் பழுதுபார்ப்... மேலும் பார்க்க