செய்திகள் :

வண்டி ஓட்டும்போது ஹெல்மெட் அணிபவரா?

post image

நாடு முழுவதும், சாலை விபத்துகளின்போது மூளையில் காயத்துடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் இருசக்கர வாகன ஓட்டிகள் என்று வேலூரில் இயங்கி வரும் சிஎம்சி மருத்துவமனை நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013-2019ஆம் ஆண்டு வரையில், மருத்துவமனையில் விபத்தில் சிக்கி தலையில் பலத்த அடிபட்டு அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் தரவுகளை திரட்டி தொகுத்து நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் வெளியாகியிருக்கின்றன.

இந்த மருத்துவமனையின் தரவுகளின்படி, சாலை விபத்துகளில் 77,539 இருசக்கர வாகன ஓட்டிகள் மரணமடைந்திருக்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளில் விபத்துகளில் சிக்குபவர்கள் மற்றும் மரணமடைபவர்கள் என அனைத்திலுமே இருசக்கர வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தே வருகிறது.

இதில் முக்கிய தரவு சொல்வது என்னவென்றால், 3,172 பேர் மூளையில் காயத்துடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் 2,259 பேர், இவர்களில் வெறும் 13 பேர்தான் விபத்தில் சிக்கும்போது ஹெல்மெட் அணிந்திருந்தவர்கள். அதாவது, விபத்தில் சிக்கி தலையில் காயத்துடன் வந்தவர்களில் ஒரு சதவீதத்துக்கும் குறைவானர்கள்தான் ஹெல்மெட் அணிந்திருக்கிறார்கள். எனவே, வாகனத்தை எடுக்கும்போதே, கையில் சாவியுடன் ஹெல்மெட் எடுக்க வேண்டும் என்பதைத்தான் இந்த தரவு குறிப்பிடுகிறது.

ஒரு மருத்துவமனையில் தலையில் காயத்துடன் வருபவர்களில் பெரும்பாலானோர் சாலை விபத்தில் சிக்கிய இருசக்கர வாகன ஓட்டிகள்தான். அதிலும் கடந்த 3 - 9 மாதங்களில் 540 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். இதில் 82 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 நாள்களிலும் 108 பேர் நான்கு நாள்களிலும் 147 பேர் எட்டு நாள்களிலும் இறந்திருக்கிறார்கள்.

ஒட்டுமொத்தமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் வெறும் 4 சதவீதம் பேருக்குத்தான் மருத்துவக் காப்பீடு இருந்திருக்கிறது என்கிறது புள்ளிவிவரம்.

விரைவில் குத்தம்பாக்கம் பேருந்து முனையம்! மூடப்படுகிறதா பூவிருந்தமல்லி பேருந்து நிலையம்?

சென்னையில் ஊரகப் பகுதிகளுடனான இணைப்பை மேம்படுத்த பூந்தமல்லி பேருந்து மையம் குத்தம்பாக்கத்திற்கு மாற்றப்படவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.சென்னையின் உள்பகுதிகளில் ஏற்படும் வாகன நெரிசலைத் தவிா்க்கவ... மேலும் பார்க்க

தமிழகம் கொண்டாடும் சோசலிச பிதாமகன் ஆச்சார்ய நரேந்திர தேவ்!

ஒழுக்கத்தின் சிகரம். அந்தக் காலத்து தேசியத் தலைவர்களில் மிகவும் உன்னதமான இடம் வகித்த இந்தியாவின் தலைசிறந்த தலைவர் என்று ஜெயப்பிரகாஷ் நாராயணால் பாராட்டப்பட்டவர்...உணரச்சி, பண்பு, அறிவு, மனித முதிர்ச்சி... மேலும் பார்க்க

வாக்காளர் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்வது எப்படி? தரவுகளும் சந்தேகமும்!

மக்களவைத் தேர்தலுக்கும் சில மாநிலங்களில் நடைபெற்ற பேரவைத் தேர்தல்களுக்கும் இடைப்பட்ட சில மாதங்களில் லட்சக்கணக்கான புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது குறித்து எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தை கேள்வி எழ... மேலும் பார்க்க

டேட்டா திட்டத்துக்கு ஆப்பு! மக்களை ஏமாற்றுகிறதா ஜியோ, ஏர்டெல்?

மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வந்த டேட்டா திட்டங்களை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் மாற்றி அமைத்துள்ளன.டேட்டா திட்டங்களுக்கான விலையை மாற்றாமல் நாள்களைக் குறைத்திருப்பதால் பலரும்... மேலும் பார்க்க

நிறைவேறுமா டிரம்ப்பின் காஸா கனவுத் திட்டம்?

‘காஸா முனையை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். பாலஸ்தீனா்களையெல்லாம் ஜோா்டான், எகிப்து போன்ற நாடுகளுக்கு வெளியேற்றிவிட்டு, அந்தப் பகுதியை மத்தியக் கிழக்குப் பிராந்தியத்தின் ரிவியேர... மேலும் பார்க்க

புற்றுநோய்... தொடக்கத்தில் வைப்போம் முற்றுப்புள்ளி

உலகளாவிய அளவில் பெரும் சவாலாக விளங்கக் கூடிய நோய்களில் புற்றுநோய் அதிமுக்கியமானது. அண்மைக்காலமாக அதன் பாதிப்பு வீதம் பெருமளவு அதிகரித்து வருவதற்கு சா்வதேச தரவுகளே சாட்சியங்களான விளங்குகின்றன. போதிய வி... மேலும் பார்க்க