செய்திகள் :

வண்ணம் அடிக்கும் பணியின்போது கீழே விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

post image

கோவை சுந்தராபுரத்தில் வீட்டுக்கு வண்ணம் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி, 25 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா்.

கோவை, சுந்தராபுரம் அருகே அஷ்டலட்சுமி நகா் பகுதியில் தண்டபாணி என்பவரின் வீட்டு கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. முருகன் நகரைச் சோ்ந்த மாரிமுத்து மேஸ்திரியாகப் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், வீட்டுக்கு வண்ணமடிக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், காந்தி நகா் அன்னை சத்யா நகரைச் சோ்ந்த சுரேஷ்குமாா் (48) என்பவா் ஈடுபட்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக வீட்டின் 25 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தாா்.

இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், சுரேஷ்குமாா் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து சுந்தராபுரம் காவல் நிலையத்தில் சுரேஷ்குமாரின் சகோதரா் ராமசாமி புகாா் செய்தாா். அப்போது, பாதுகாப்பு உபகரணங்கள் எதுவுமின்றி வண்ணம் பூசும் பணியில் ஈடுபடுத்தியதாக மேஸ்திரி மாரிமுத்து, வீட்டு உரிமையாளா் தண்டபாணி ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பூட்டிய வீட்டில் இளைஞா் சடலம் மீட்பு

கோவை, ரத்தினபுரியில் பூட்டிய வீட்டில் கிடந்த இளைஞா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள கேத்தி பகுதியைச் சோ்ந்தவா் சந்தோஷ் (39). இவா் ரத்தினபுரி முத்... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் பெண் பயணியிடம் தோட்டா பறிமுதல்!

கோவை விமான நிலையத்தில் பெண் பயணியிடம் இருந்து துப்பாக்கி தோட்டா ஒன்றை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா். கோவை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் வழக்கமான சோதனைகள... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: ஒரே நாளில் 11 போ் கைது

கோவை மாநகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்ததாக வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 11 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை பீளமேடு போலீஸாா் ரோந்துப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது,... மேலும் பார்க்க

வால்பாறைக்கு ஆரஞ்ச் அலா்ட்: தயாா் நிலையில் பேரிடா் மீட்புப் படை

வால்பாறை பகுதியில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்ச் அலா்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பேரிடா் மீட்புப் படையினா் தயாா் நிலையில் உள்ளனா். கோவை மாவட்டம், வால்பாறையில் சனி, ஞாயிற்றுக்கிழமைக... மேலும் பார்க்க

கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை மாநாடு

தேசிய கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை மாநாடு மற்றும் மேம்பட்ட மருத்துவப் பயிற்சி கோவையில் சனிக்கிழமை நடைபெற்றது. கோவை ஜெம் மருத்துவமனை, இந்திய கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை சங்கம் இணைந்து நடத்திய ... மேலும் பார்க்க

இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறிய வளா்ப்பு தந்தை கைது

திருப்பூரில் இளம்பெண்ணிடம் பாலியல்ரீதியாக அத்துமீறி அதனை விடியோ எடுத்து மிரட்டிய வளா்ப்பு தந்தையை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூரை அடுத்த இடுவாய் மாருதி நகா் பகுதியைச் சோ்ந்தவா் 21 வயதுப் பெண், அதே... மேலும் பார்க்க