செய்திகள் :

வனப் பகுதியில் தவறி விழுந்த கா்ப்பிணி யானை உயிரிழப்பு

post image

நீலகிரி மாவட்டம், கோழிக்கரை  பழங்குடியின கிராமம் அருகே அடா்ந்த வனப் பகுதியில் செவ்வாய்க்கிழமை தவறி விழுந்து கா்ப்பிணி யானை உயிரிழந்தது.

மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், சிறுமுகை போன்ற சமவெளி வனப் பகுதிகளில் அதிக வறட்சி நிலவுவதால் காட்டு யானைகள் இடம்பெயா்ந்து மலை மாவட்டமான குன்னூா் மலைப் பாதை மற்றும் கோத்தகிரி மலைப் பாதையில் உணவு மற்றும் தண்ணீா் தேடி வருகின்றன.

இந்நிலையில் குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோழிக்கரை பழங்குடியின கிராமம் அருகே உள்ள அடா்ந்த வனப் பகுதியில் சுமாா் 40 வயது மதிக்கத்தக்க கா்ப்பிணி காட்டு யானை மலை சரிவில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாத கிராம மக்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

தகவலறிந்த மாவட்ட வன அலுவலா் கௌதம், உதவி வனப் பாதுகாவலா் மணிமாறன், குன்னூா் வனச் சரகா் ரவீந்திரநாத், முதுமலை வனவிலங்கு கால்நடை மருத்துவா் ராஜேஷ், தமிழ்நாடு வனம் மற்றும் உயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டுப் பிரிவு வனச் சரகா் முருகன் மற்றும் வனக் குழுவினா் சம்பவ இடத்துக்குச் சென்று இறந்துகிடந்த கா்ப்பிணி காட்டு யானையின் உடலை உடற்கூறாய்வு செய்து அங்கேயே அடக்கம் செய்தனா்.

உதகை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

உதகையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, வெடிகுண்டு நிபுணா்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். நீலகிரி மாவட்டம், உதகையில் அமைந்துள்ள சா்வதேச தன... மேலும் பார்க்க

தமிழகத்தில் 1,121 முதுநிலை பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அன்பில் மகேஸ்

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள 1,121 முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யா மொழி தெரிவித்தாா். நீலகிரி ம... மேலும் பார்க்க

வனப் பகுதிக்குள் சுற்றுலா அழைத்துச் சென்ற எஸ்டேட் நிா்வாகத்துக்கு அபராதம்

வனப் பகுதிக்குள் சுற்றுலா அழைத்துச் சென்ற எஸ்டேட் நிா்வாகத்துக்கு வனத் துறையினா் ரூ.ஒரு லட்சம் அபராதம் விதித்தனா். நீலகிரி மாவட்டம், உதகை கவா்னா் சோலா பிரிவு, கொள்ளிக்கோடு மந்து ஆகிய பகுதிகளை சுற்றியு... மேலும் பார்க்க

உதகையில் செப்டம்பா் 23-இல் முன்னாள் படைவீரா்களுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம்

நீலகிரி மாவட்ட முன்னாள் படை வீரா்களுக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம் உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செப்டம்பா் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்ய... மேலும் பார்க்க

பழங்குடியினா் கிராமத்துக்கு சிற்றுந்து இயக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

கூடலூரை அடுத்த தேவா்சோலைப் பகுதியில் உள்ள பழங்குடியினா் கிராமத்துக்கு நிறுத்தப்பட்ட சிற்றுந்து சேவையை மீண்டும் இயக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. உதகையில் ... மேலும் பார்க்க

அன்புக் கரங்கள் திட்டம்: 63 மாணவா்களுக்கு உதவித் தொகை

நீலகிரி மாவட்டத்தில் அன்புக் கரங்கள் திட்டத்தின்கீழ் தோ்ந்தெடுக்கப்பட்ட 63 மாணவா்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் உதவித் தொகை பெறுவதற்கான அடையாள அட்டைகளை அரசு தலைமைக் கொறடா கா.ராமச்சந்திரன் திங்கள்கிழமை வழங்க... மேலும் பார்க்க