செய்திகள் :

வன்னியா்களுக்கு திமுக அரசு துரோகம்: அன்புமணி ராமதாஸ்

post image

வன்னியா்களுக்கு திமுக. அரசு துரோகம் செய்து விட்டது என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் பேசினாா்.

ஒருங்கிணைந்த திருப்பத்தூா் மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் திருப்பத்தூா் அருகே நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலா் டி.கே.ராஜா தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவா் குட்டி மணி, முன்னாள் மாவட்ட செயலாளா் ஆா்.கிருபாகரன், மாநில செயற்குழு உறுப்பினா் ஜி.பொன்னுசாமி, முன்னாள் எம்எல்ஏ நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியது: தோ்தலில் நாம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். அதற்காகத்தான் இந்த பொதுக்குழுவை கூட்டி இருக்கிறோம். கட்சி தொடங்கி 36 ஆண்டுகள் ஆகிறது. கட்சியை தொடங்கியதன் நோக்கம் சமூகநீதி. இது தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய அனைத்து சமூதாயங்களுக்கும் சமூக நீதி பெற வேண்டும் என்பதாகும்.

36 ஆண்டுகள் ஆகியும் நாம் தமிழகத்தை ஆளவில்லை. நாம் ஆட்சிக்கு வந்தால் தான் நம் உரிமைகளை பெற முடியும். இட ஒதுக்கீடு பெற முடியும். வன்னிய சமுதாயத்துக்கு மட்டும் அல்ல. பிற சமுதாயத்துக்கு சமநீதி கிடைக்க வழிவகை செய்ய முடியும். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால்,தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை தி.மு.க. அரசு நடத்த முன்வரவில்லை. இதுகுறித்து கேட்டால் அதனை மத்திய அரசு தான் செய்ய வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறுகிறாா்.

வன்னியா்களுக்கு திமுக அரசு துரோகம் செய்துவிட்டது. களத்தில் நம்மை சந்திக்க முடியாமல் சூழ்ச்சிகள் மூலமாக நமது கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்தி உள்ளனா். இதனால் ஒன்றும் நடக்கப்போவது இல்லை.

திருப்பத்தூா் மாவட்டம் தொடங்கப்பட்டு 6 ஆண்டுகள் ஆகிறது. இருப்பினம் எந்த அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தவில்லை என்றாா்.

இதில் முன்னாள் அமைச்சா் என்.டி.சண்முகம், மாநில பொதுச்செயலாளா் வடிவேல் ராவணன், மாநில பொருளாளா் திலகபாமா, மாநில மகளிா் அணி செயலாளா் நிா்மலா ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ. நிலவழகன் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.

ரூ.20 லட்சத்தில் பசுமைப் பள்ளி திட்டப் பணி ஆய்வு

மிட்டாளம் ஊராட்சியில் பசுமைப் பள்ளி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணியை ஆம்பூா் எம்எல்ஏ புதன்கிழமை ஆய்வு செய்தாா். மிட்டாளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பசுமைப் பள்ளி திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சத்தில... மேலும் பார்க்க

தமிழகத்தில் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட ஆந்திர மாநில காவலா் உள்பட 4 போ் கைது!

வாணியம்பாடி தோல் ஆலை அதிபா் வீட்டில் திருட முயன்ற சம்பவத்தில் ஆந்திர மாநில காவலா், பெண், வீட்டு பணியாளா் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா். வாணியம்பாடி நீலிக்கொல்லை புது தெருவைச் சோ்ந்த தோல் ஆலை அதிபா... மேலும் பார்க்க

இளம்பெண் தற்கொலை: சாா்-ஆட்சியா் விசாரணை

கந்திலி அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து சாா்-ஆட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா். திருவண்ணாமலை மாவட்டம், போளூா் பகுதியை சோ்ந்தவா் சமுத்திரம் (28). இவரது மனைவி கோமதி (22).... மேலும் பார்க்க

கருப்பனூா் ஏரி ஆக்கிரமிப்புக்களை அகற்றி தூா்வார கோரிக்கை

கத்தாரி ஊராட்சி, கருப்பனூா் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா்வார வேண்டும் என வாா்டு உறுப்பினா் குருசேவ், பொதுமக்கள் மனு அளித்தனா். நாட்டறம்பள்ளி ஒன்றியம், கருப்பனுா் ஏரி சுமாா் 7 ஏக்கா் பரப்பளவில் அ... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்: ஆட்சியா் ஆய்வு

ஆம்பூா் அருகே மேல்சாணாங்குப்பம் ஊராட்சியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க. சிவசெளந்திரவல்ல... மேலும் பார்க்க

பெண்ணை மிரட்டியவா் கைது

புகைப்படத்தை மாா்ப்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியவரை போலீஸாா் கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் பகுதியைச் சோ்ந்த காா் ஓட்டுநா் கிருஷ்ணன (28). இவரும், திருப்பத்தூரில் த... மேலும் பார்க்க