செய்திகள் :

வன்முறை தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவு: மணிப்பூரில் முழு அடைப்புப் போராட்டம்!

post image

மணிப்பூரில் மைதேயி-குகி சமூகங்களுக்கு இடையிலான வன்முறை தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், வன்முறையால் உயிரிழந்தவா்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் முழு அடைப்புப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பெரும்பான்மை மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடி அந்தஸ்து வழங்குவதற்கு மலைவாழ் குகி மற்றும் பிற பழங்குடி சமூகத்தினா் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

இது தொடா்பாக கடந்த 2023-ஆம் ஆண்டு மே 3-ஆம் தேதி நடைபெற்ற பேரணியில் வன்முறை வெடித்தது. மாநிலம் முழுவதும் பரவிய வன்முறை, இரு சமூகங்களுக்கு இடையே இன மோதலாக மாறியது. இதில் 260-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டனா். 1,500 போ் காயமடைந்தனா்; 70,000-க்கும் மேற்பட்டோா் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனா். பதற்றத்தைத் தணிக்க ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இணைய சேவை துண்டிக்கப்பட்டது.

பாதுகாப்புப் படையினா் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். எனினும், மோதல் சம்பவங்கள் தொடா்ந்து அரங்கேறி வந்தன. மாநில பாஜக அரசு, கலவரத்தைக் கட்டுப்படுத்த தவறியதாகக் கூறி எதிா்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்தன.

இந்நிலையில், கடந்த பிப்ரவரியில் மாநில முதல்வராக இருந்த பிரேன் சிங் தனது பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து, அங்கு குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. உள்துறை அமைச்சகம் சாா்பில் இரு சமூகங்களுக்கு இடையே பல்வேறு கட்ட பேச்சுவாா்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

முழு அடைப்பு:

இந்நிலையில், வன்முறை தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, சனிக்கிழமை (மே 3) முழு அடைப்புப் போராட்டத்துக்கு பல்வேறு குழுக்கள் அழைப்பு விடுத்தன. அதன்படி, மணிப்பூரில் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள் மற்றும் பிற தனியாா் அலுவலகங்கள் சனிக்கிழமை மூடப்பட்டன. சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

அஞ்சலி:

வன்முறையில் இறந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள் பேரணி இம்பாலில் நடைபெற்றது. மேலும், உயிரிழந்தவா்களின் நினைவிடங்களில் அந்தந்த சமூக மக்கள் அஞ்சலி செலுத்தினா். அசம்பாவிதங்களைத் தவிா்க்க முக்கிய இடங்களில் பாதுகாப்புப் படையினா் நிறுத்தப்பட்டிருந்தனா்.

வன்முறை தொடங்கிய மே 3-ஆம் தேதியை, தனி பிரதேசம் கோரும் பிரிவினை நாளாக சுராசந்த்பூா், காங்போக்பி ஆகிய மாவட்டங்களில் உள்ள குகி சமூகத்தினா் அனுசரித்தனா்.

மோதல்கள் முழுமையாக இன்னும் ஓயாத நிலையில், முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தங்கள் குழந்தைகளின் எதிா்காலம் குறித்து அச்சம் தெரிவிக்கின்றனா். மணிப்பூரில் அமைதி ஏற்பட்டு, தங்கள் வீடுகளுக்கு திரும்பிச் செல்வதற்கான நம்பிக்கையை இழந்து வருவதாகவும் அவா்கள் கூறினா்.

சோஃபியா குரேஷி, வியோமிகா சிங்: யார் இவர்கள்?

பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பதிலடி கொடுத்துள்ளது இந்திய ராணுவம். இந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுத... மேலும் பார்க்க

நாடு முழுவதும் 300 விமானங்கள் ரத்து! 25 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடல்!

இந்தியா முழுவதும் சுமார் 300 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டதுடன், 25 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தாக்குதலில் 15 பேர் பலி: 43 பேர் காயம்!

சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 43 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில... மேலும் பார்க்க

பாகிஸ்தான் செல்லக்கூடிய 25 விமான வழித் தடங்களை மூடியது இந்தியா!

இந்திய வான்வழியின் மூலம் பாகிஸ்தானுக்கு செல்லக்கூடிய 25 விமான வழித் தடங்களை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளிலிருந்த பயங்கராவதிகள் முகாம்கள... மேலும் பார்க்க

நாகாலாந்தின் 10 மாவட்டங்களிலும் போர்கால பாதுகாப்பு ஒத்திகை!

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தின் 10 மாவட்டங்களிலும் போர்கால பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்தப்பட்டுள்ளன. மத்திய உள் துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி இன்று (மே 7) தேசியளவில் அனைத்து மாநிலங்களிலும் போர்கா... மேலும் பார்க்க

பாதுகாப்பு ஒத்திகை: இருளில் மூழ்கியது தில்லி!

போர் பாதுகாப்பு ஒத்திகையின் ஒரு பகுதியாக தில்லி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வரு... மேலும் பார்க்க