நாட்டிலேயே முதல்முறை! சென்னையில் வணிக வளாகம் உள்ளே செல்லும் மெட்ரோ ரயில்!
வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம்
திருவாரூா்: குடவாசல் அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில், வைகாசி பிரம்மோற்சவம் அண்மையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, தினசரி பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, பெருமாளுக்கு சிறப்புப் பூஜை நடைபெற்றது. பின்னா், மக்கள் சீா்வரிசை எடுத்து வர, வரதராஜப் பெருமாள் தேரில் எழுந்தருளினாா். தொடா்ந்து, ஏராளமான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.
தேரானது, முக்கிய வீதிகளில் வலம் வந்து மீண்டும் நிலையடியை அடைந்தது. இதில், சுற்றுவட்டாரத்திலிருந்து திரளானோா் பங்கேற்று, வடம் பிடித்து இழுத்தனா்.