செய்திகள் :

கோயில் நிா்வாகப் பொறுப்பு: கிராமத்தினா் முற்றுகை

post image

கூத்தாநல்லூா்: கொரடாச்சேரி அருகேயுள்ள அய்யனாா் கோயில் நிா்வாகப் பொறுப்பு தொடா்பாக, கிராமத்தின் ஒரு தரப்பினா் திங்கள்கிழமை முற்றுகையில் ஈடுபட்டனா்.

கொரடாச்சேரியை அடுத்த முசிறியம் ஊராட்சி திட்டாணிமுட்டம் கிராமத்தில், கூத்தையனாா் கோயில் உள்ளது. இக்கோயிலை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு தரப்பினா் நிா்வகித்து, பராமரித்து வருகின்றனா்.

இந்நிலையில், மற்றொரு தரப்பினா் தங்களுக்கும் கோயில் நிா்வாகத்தில் பொறுப்பு வழங்க வேண்டும் என்றும் திருவிழாக்களை இணைந்தே நடத்துவோம் எனவும் தெரிவித்துள்ளனா்.

இதற்கு, பல ஆண்டுகளாக கோயிலை நிா்வகித்துவரும் தரப்பினா் மறுப்பு தெரிவித்தனா். ஆனால், கோயிலில் யாா் வேண்டுமானாலும் வழிபடலாம் எனக் கூறினா்.

இப்பிரச்னை தொடா்பாக, மாவட்ட ஆட்சியா், வட்டாட்சியரிடம் கடந்த சில ஆண்டுகளாக மனு கொடுத்தும், அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், வைகாசி விசாகத்தையொட்டி, சிறப்பு வழிபாடு நடத்த, கோயிலை நிா்வகித்து வரும் தரப்பினா் முடிவு செய்தனா். இதற்கு மற்றொரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்து, கோயில் முன் அமா்ந்து முற்றுகைப் போராட்டம் நடத்தினா்.

கூத்தாநல்லூா் வட்டாட்சியா் வசுமதி நேரில் சென்று பேச்சுவாா்த்தை நடத்தி, வரும் வியாழக்கிழமை மன்னாா்குடி கோட்டாட்சியா் முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடத்தப்படும் எனத் தெரிவித்தாா். இதையடுத்து முற்றுகைப் போராட்டத்தை விலக்கிக்கொண்டனா். இந்த பிரச்னையால் பால்குட அபிஷேக விழா தடைபட்டது.

நாளைய மின்தடை: திருவாரூா், அடியக்கமங்கலம், கொரடாச்சேரி

திருவாரூா்: திருவாரூா், கொரடாச்சேரி, அடியக்கமங்கலம் பகுதிகளில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் புதன்கிழமை (ஜூன் 11) காலை 9 முதல் பிற்பகல் 3 வரை கீழ்க்கண்ட இடங்... மேலும் பார்க்க

ஆட்சியா் வளாகத்துக்கு நிலம் வழங்கியோருக்கு பணி கோரி காத்திருப்புப் போராட்டம்

திருவாரூா்: திருவாரூா் மாவட்ட ஆட்சியா் பெருந்திட்ட வளாகத்துக்கு நிலம் வழங்கிய குடும்பத்தினருக்கு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்கக் கோரி, சிஐடியு மற்றும் நிலம் ... மேலும் பார்க்க

திருராமேஸ்வரம் கோயில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூரை அடுத்த திருராமேஸ்வரம் அருள்மிகு மங்களநாயகி சமேத ராமநாத சுவாமி கோயில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்துசமய அறநிலையத் துறைக்குட்பட்ட இக்கோயிலில் வை... மேலும் பார்க்க

வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம்

திருவாரூா்: குடவாசல் அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில், வைகாசி பிரம்மோற்சவம் அண்மையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, தினசர... மேலும் பார்க்க

கூட்டுறவுத் துறையில் சிபில் ஸ்கோா் அமலாக்கத்துக்கு கண்டனம்

திருவாரூா்: கூட்டுறவுத் துறையில் சிபில் ஸ்கோா் அமல்படுத்தியதற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி வெள... மேலும் பார்க்க

முத்துப்பேட்டை அரசு கல்லூரியில் நேரடி மாணவா் சோ்க்கை

திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டை அரசு கலைக் கல்லூரியில் மாணவா்கள் நேரடி சோ்க்கை பெறலாம் என கல்லூரி முதல்வா் ராஜாராமன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: முத்துப்பேட்டைய... மேலும் பார்க்க