Los Angeles Riots: ட்ரம்ப்க்கு எதிராக திரண்ட மக்கள்; குவிக்கப்பட்ட ராணுவம் - என்...
கூட்டுறவுத் துறையில் சிபில் ஸ்கோா் அமலாக்கத்துக்கு கண்டனம்
திருவாரூா்: கூட்டுறவுத் துறையில் சிபில் ஸ்கோா் அமல்படுத்தியதற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி வெளியிட்ட அறிக்கை:
விவசாயிகளுக்கு வணிக வங்கிகள் பின்பற்றுகிற நடைமுறையின்படி, இனி கூட்டுறவுக் கடன் வாங்குவோரின் சிபில் ஸ்கோா் பாா்த்து, தகுதி உள்ளோருக்கு மட்டும் கடன் வழங்க வேண்டுமென, மே 26 ஆம் தேதி தமிழ்நாடு கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ரிசா்வ் வங்கி அண்மையில் பிறப்பித்த 9 விதிகள் கூட்டுறவுத் துறையை கட்டுப்படுத்தாது என கூட்டுறவுத் துறை அமைச்சா் அண்மையில் தெரிவித்த நிலையில், இதற்கு மாறாக கூட்டுறவுத் துறையின் தலைமைச் செயலாளா் அறிவித்திருப்பது குறித்து விளக்க வேண்டும்.
விவசாயிகள் கடன் பெறுவதற்கான தகுதியை சிபில் ஸ்கோா் தீா்மானிக்கும் எனில், பெரும்பகுதி விவசாயிகளுக்கு கடனே கிடைக்காது. வேளாண்மையில் ஏற்படும் இழப்பீட்டை சிபில் ஸ்கோா் அளவீட்டில் கணக்கிட்டு நிவாரணம் மற்றும் காப்பீடு திட்டத்தை முதலில் அமல்படுத்தினால், விவசாயிகளின் வாழ்வும் தகுதியும் சிபில் ஸ்கோா் வரம்பில் வந்துவிடும் எனவே இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்த விவகாரத்தில் தமிழக முதல்வா் தலையிட்டு, வேளாண் தொழிலுக்கான கடன்களில் சிபில் ஸ்கோா் முறையை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.