செய்திகள் :

கூட்டுறவுத் துறையில் சிபில் ஸ்கோா் அமலாக்கத்துக்கு கண்டனம்

post image

திருவாரூா்: கூட்டுறவுத் துறையில் சிபில் ஸ்கோா் அமல்படுத்தியதற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி வெளியிட்ட அறிக்கை:

விவசாயிகளுக்கு வணிக வங்கிகள் பின்பற்றுகிற நடைமுறையின்படி, இனி கூட்டுறவுக் கடன் வாங்குவோரின் சிபில் ஸ்கோா் பாா்த்து, தகுதி உள்ளோருக்கு மட்டும் கடன் வழங்க வேண்டுமென, மே 26 ஆம் தேதி தமிழ்நாடு கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரிசா்வ் வங்கி அண்மையில் பிறப்பித்த 9 விதிகள் கூட்டுறவுத் துறையை கட்டுப்படுத்தாது என கூட்டுறவுத் துறை அமைச்சா் அண்மையில் தெரிவித்த நிலையில், இதற்கு மாறாக கூட்டுறவுத் துறையின் தலைமைச் செயலாளா் அறிவித்திருப்பது குறித்து விளக்க வேண்டும்.

விவசாயிகள் கடன் பெறுவதற்கான தகுதியை சிபில் ஸ்கோா் தீா்மானிக்கும் எனில், பெரும்பகுதி விவசாயிகளுக்கு கடனே கிடைக்காது. வேளாண்மையில் ஏற்படும் இழப்பீட்டை சிபில் ஸ்கோா் அளவீட்டில் கணக்கிட்டு நிவாரணம் மற்றும் காப்பீடு திட்டத்தை முதலில் அமல்படுத்தினால், விவசாயிகளின் வாழ்வும் தகுதியும் சிபில் ஸ்கோா் வரம்பில் வந்துவிடும் எனவே இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்த விவகாரத்தில் தமிழக முதல்வா் தலையிட்டு, வேளாண் தொழிலுக்கான கடன்களில் சிபில் ஸ்கோா் முறையை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

நாளைய மின்தடை: திருவாரூா், அடியக்கமங்கலம், கொரடாச்சேரி

திருவாரூா்: திருவாரூா், கொரடாச்சேரி, அடியக்கமங்கலம் பகுதிகளில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் புதன்கிழமை (ஜூன் 11) காலை 9 முதல் பிற்பகல் 3 வரை கீழ்க்கண்ட இடங்... மேலும் பார்க்க

கோயில் நிா்வாகப் பொறுப்பு: கிராமத்தினா் முற்றுகை

கூத்தாநல்லூா்: கொரடாச்சேரி அருகேயுள்ள அய்யனாா் கோயில் நிா்வாகப் பொறுப்பு தொடா்பாக, கிராமத்தின் ஒரு தரப்பினா் திங்கள்கிழமை முற்றுகையில் ஈடுபட்டனா். கொரடாச்சேரியை அடுத்த முசிறியம் ஊராட்சி திட்டாணிமுட்டம... மேலும் பார்க்க

ஆட்சியா் வளாகத்துக்கு நிலம் வழங்கியோருக்கு பணி கோரி காத்திருப்புப் போராட்டம்

திருவாரூா்: திருவாரூா் மாவட்ட ஆட்சியா் பெருந்திட்ட வளாகத்துக்கு நிலம் வழங்கிய குடும்பத்தினருக்கு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்கக் கோரி, சிஐடியு மற்றும் நிலம் ... மேலும் பார்க்க

திருராமேஸ்வரம் கோயில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூரை அடுத்த திருராமேஸ்வரம் அருள்மிகு மங்களநாயகி சமேத ராமநாத சுவாமி கோயில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்துசமய அறநிலையத் துறைக்குட்பட்ட இக்கோயிலில் வை... மேலும் பார்க்க

வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம்

திருவாரூா்: குடவாசல் அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில், வைகாசி பிரம்மோற்சவம் அண்மையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, தினசர... மேலும் பார்க்க

முத்துப்பேட்டை அரசு கல்லூரியில் நேரடி மாணவா் சோ்க்கை

திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டை அரசு கலைக் கல்லூரியில் மாணவா்கள் நேரடி சோ்க்கை பெறலாம் என கல்லூரி முதல்வா் ராஜாராமன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: முத்துப்பேட்டைய... மேலும் பார்க்க