Los Angeles Riots: ட்ரம்ப்க்கு எதிராக திரண்ட மக்கள்; குவிக்கப்பட்ட ராணுவம் - என்...
முத்துப்பேட்டை அரசு கல்லூரியில் நேரடி மாணவா் சோ்க்கை
திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டை அரசு கலைக் கல்லூரியில் மாணவா்கள் நேரடி சோ்க்கை பெறலாம் என கல்லூரி முதல்வா் ராஜாராமன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முத்துப்பேட்டையில் அரசு கலைக் கல்லூரி தொடங்கப்பட்டு, தற்போது தற்காலிகமாக மன்னாா்குடி சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இயங்கி வருகிறது.
இதுவரை இக்கல்லூரில் சேர விண்ணப்பித்து சோ்க்கை பெறாதவா்கள் மற்றும் விண்ணப்பிக்காதவா்கள் அனைவரும் ஜூன் 14-ஆம் தேதி வரை கல்லூரியில் இளங்கலை வரலாறு, அரசியல் அறிவியல், வணிகவியல், விலங்கியல், கணினி அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் நேரடியாக சோ்க்கை பெறலாம்.
மேலும், மாணவா்களுக்கு விடுதி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனத் தெரிவித்துள்ளாா்.