செய்திகள் :

வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை!

post image

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.63,240-க்கு விற்பனையாகி வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வரும் நிலையில், திங்கள் கிழமை பவுனுக்கு ரூ.680 குறைந்து ரூ.61,640-க்கு விற்பனையானது. செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.62,480-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், புதன்கிழமை(பிப்.5) கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ரூ.7,905-க்கும், பவுனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.63,240-க்கு விற்பனையாகிறது.

இதையும் படிக்க | தங்கத்தில் இப்போது முதலீடு சாத்தியமா?

வெள்ளி விலை நிலவரம்

அதேபோன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.107-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ.1,000 அதிகரித்து ரூ.1,07,000-க்கு விற்பனையாகிறது.

விலை உயர்வுக்கு காரணம் என்ன?

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முக்கிய நடவடிக்கைகள், பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2025-26-க்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் தங்கத்துக்கான இறக்குமதி வரி குறைப்பு குறித்த அறிவிப்பு இல்லாதது போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

டாஸ்மாக்கில் கள்ளச்சாரயம்... திமுக வெட்கப்பட வேண்டும்: இபிஎஸ்

கள்ளச்சாராய விற்பனையை நிறுவனமயப் படுத்தியுள்ளதற்கு திமுக அரசு வெட்கப்பட வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.இது பற்றி கள்ளச்சாராய விற்பனை தன்னுடைய எக்ஸ் தளப் ப... மேலும் பார்க்க

கும்பமேளா மரணங்களை பாஜக மறைத்துவிட்டது: திமுக குற்றச்சாட்டு

கும்பமேளா கூட்ட நெரிசலில் 48 பேர் இறந்துள்ள நிலையில், மரணங்களைக் கூட மறைத்து தவறான கணக்கைக் காட்டியுள்ளதாக பாஜகவை திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'முரசொலி' கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. உத்தரப்... மேலும் பார்க்க

மத நல்லிணக்கத்தை பேணுவதற்கு திருப்பரங்குன்றத்தில் கூடுவோம்: செல்வப்பெருந்தகை

மத நல்லிணக்கத்தை பேணுவதற்கு திருப்பரங்குன்றத்தில் நாளை(பிப். 6) அணிதிரள்வோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சி சார்பில் திருப்பரங்குன்றம் கோயில... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கில் பிற்பகல் 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 42.41% வாக்குகள் பதிவாகியுள்ளன. ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை (பிப்ரவரி 5) காலை 7 மணிக்கு ... மேலும் பார்க்க

திமுக அரசு எதிர் கட்சிகளுடைய ஜனநாயகத்தை நசுக்க பார்க்கிறது: வானதி சீனிவாசன்

கோவை: திமுக அரசு எதிர் கட்சிகளுடைய ஜனநாயகத்தை நசுக்க பார்க்கிறது என பாஜக தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் குற்றம் சாட்டினாா்.கோவை மக்கள் சேவை மையம் மற்றும்... மேலும் பார்க்க

இனி என்ன சொல்லப் போகிறார் ஆளுநர் ரவி?: அமைச்சர் ரகுபதி கேள்வி

மாநில அரசிற்கு கட்டுப்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும் என்ற சட்டப்படியான உண்மையை பிரதமர் மோடியே ஒத்துக்கொள்கிறார். இனி என்ன சொல்லப் போகிறீர்கள் ஆளுநர் ரவி அவர்களே? என சட்ட அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பிய... மேலும் பார்க்க