செய்திகள் :

வரிச்சியூர் செல்வம் மீதான கொலை வழக்கு விருதுநகர் நீதிமன்றத்திற்கு மாற்றம்

post image

வரிச்சியூர் செல்வம் மீதான கொலை வழக்கு விருதுநகர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், வரிச்சியூர் பகுதியைச் சேர்ந்த ரௌடி செல்வராஜ் என்ற வரிச்சியூர் செல்வம். இவரது கூட்டாளியான விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(32) கடந்த 2021-ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் வரிச்சியூர் செல்வம் உள்ளிட்ட 7 பேர் மீது 2023 ஜூன் மாதம் விருதுநகர் கிழக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

வழக்கு விசாரணை விருதுநகரில் உள்ள நீதித்துறை நடுவர் மன்றம் எண் 2- ல் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றி நீதித்துறை நடுவர் ஐயப்பன் உத்தரவிட்டார்.

கைலாஷ் மானசரோவர் யாத்திரை: சிக்கிம் வந்தடைந்த முதல் குழு!

இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்த போது குற்றம் சாட்டப்பட்டுள்ள வரிச்சியூர் செல்வம், கிருஷ்ணகுமார், ஈஸ்வர் சாய் தேஜூ, சதீஷ்குமார், லோகேஷ், சகாய டென்னிஸ் சரண் பாபு, பாலசுப்பிரமணியம் ஆகிய 7 பேரும் ஆஜராகினர்.

வழக்கு விசாரணையை விருதுநகரில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றிய நீதிபதி ஜெயக்குமார், ஜூலை 14-ம் தேதி 7 பேரும் ஆஜராக உத்தரவிட்டார்.

இலவச பேருந்து பயண அட்டை: கல்வித் துறை அறிவுறுத்தல்

சென்னை: பள்ளி மாணவா்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்குவது தொடா்பாக தலைமை ஆசிரியா்களுக்கு கல்வித் துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ச.கண்ணப்பன், அனை... மேலும் பார்க்க

ஏடிஜிபி ஜெயராம் மீது ஒழுங்கு நடவடிக்கை: தமிழக காவல் துறை முடிவு

சென்னை: கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி எச்.எம்.ஜெயராம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து தமிழக காவல் துறை உயா் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனா். திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காட்டில... மேலும் பார்க்க

சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி கைது: உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் காவல் துறை நடவடிக்கை

சென்னை: சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் சென்னை உயா்நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் ஏடிஜிபி ஜெயராமன் கைது செய்யப்பட்டாா். திருவள்ளூா் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த இளைஞா் தனுஷ், தேனியைச் சோ்ந்த பெ... மேலும் பார்க்க

குழந்தைகளின் மீதான கண்காணிப்பு அவசியம்: அமைச்சா் பி.கீதாஜீவன்

சென்னை: குழந்தைகளின் மீதான கண்காணிப்பு அவசியம் என்று சமூக நலத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன் வலியுறுத்தியுள்ளாா். தமிழ்நாடு வீட்டு வேலைத் தொழிலாளா்கள் நல அறக்கட்டளை மற்றும் தேசிய வீட்டு வேலை தொழிலாளா் இ... மேலும் பார்க்க

காவல் கண்காணிப்பாளா் அருண் திடீா் ராஜிநாமா

சென்னை: தமிழக காவல் துறையில் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய அருண் திடீரென ராஜிநாமா செய்தாா். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதியைச் சோ்ந்தவா் அருண். இவா், தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம... மேலும் பார்க்க

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு: பூவை ஜெகன்மூா்த்தி எம்எல்ஏவுக்கு உயா்நீதிமன்றம் கடும் கண்டனம்

சென்னை: திருவள்ளூா் மாவட்டத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பூவை ஜெகன்மூா்த்திக்கு சென்னை உயா்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. திருவள்... மேலும் பார்க்க