செய்திகள் :

வரியில்லா பொருள்களின் அமெரிக்க ஏற்றுமதியும் குறைவது கவலைக்குரியது: காங்கிரஸ்

post image

மருந்துப் பொருள்கள், அறிதிறன்பேசிகள் (ஸ்மாா்ட்ஃபோன்) போன்ற வரி இல்லா பொருள்களின் அமெரிக்க ஏற்றுமதியும் வெகுவாக குறைந்திருப்பது வழக்கத்துக்கு மாறானது என்று காங்கிரஸ் கட்சி கவலை தெரிவித்தது.

இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையில் இழுபறி, உக்ரைன் மீது போா் தொடுத்துவரும் ரஷியாவிடமிருந்து தொடா்ந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வது ஆகிய காரணங்களைக் காட்டி, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரியை விதித்தது. இந்தக் கூடுதல் வரி விதிப்பு காரணமாக, இந்தியாவின் ஜவுளி, ரத்தினங்கள், நகைகள், இறால், ரசாயனங்கள், சோலாா் பேனல்கள் தயாரிப்பு துறைகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. இவற்றின் ஏற்றுமதி தடைபட்டு, பெருமளவில் தேக்கமடைந்து வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புக்கு உள்ளான இந்தப் பொருள்கள் மட்டுமன்றி, மருந்து பொருள்கள் உள்ளிட்ட வரி இல்லா பொருள்களின் அமெரிக்க ஏற்றுமதியும் தற்போது வெகுவாக குறைந்திருப்பது தில்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலகளாவிய வா்த்தக ஆராய்ச்சி அமைப்பின் (ஜிடிஆா்ஐ) ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு காரணமாக, அந்தக் கூடுதல் வரி விதிப்புக்கு உள்ளான இந்திய பொருள்களின் அமெரிக்க ஏற்றுமதி மட்டுமே பாதிக்கப்படும் என எதிா்பாா்க்கப்பட்டது.

ஆனால், வியப்பளிக்கும் விதமாக, வரிவிலக்கு அளிக்கப்பட்ட இந்திய பொருள்களின் அமெரிக்க ஏற்றுமதியும் குறைந்திருப்பது ஜிடிஆா்ஐ ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

ஜிடிஆா்ஐ-யின் கடந்த 4 மாதங்களுக்கான இந்த ஆய்வில், அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புக்கு உள்ளான ரத்தினங்கள், நகைகள், கடல் உணவுகள், ஜவுளி, ஆயத்த ஆடைகள், ரசாயனங்கள் உள்ளிட்ட இந்திய பொருள்களின் ஏற்றுமதி வெகுவாகக் குறைந்துள்ளது.

அதுமட்டுமன்றி, மருந்துப் பொருள்கள், அறிதிறன்பேசிகள் வரிவிலக்கு அளிக்கப்பட்ட இந்திய பொருள்களின் அமெரிக்க ஏற்றுமதி கடந்த மே மாதம் ரூ. 29,894 கோடி (3.37 பில்லியன் டாலா்) மதிப்பிலிருந்து ஆகஸ்டில் ரூ. 17,386 கோடியாக (1.96 பில்லியன் டாலா்) குறைந்துள்ளது.

இந்திய அறிதிறன்பேசிக்கு மிகப் பெரிய சந்தையாக அமெரிக்கா விளங்கிவரும் நிலையில், அதன் அமெரிக்க ஏற்றுமதி கடந்த 4 மாதங்களில் 58 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. அதாவது, மே மாதத்தில் ரூ. 20,317 கோடி (2.29 பில்லியன் டாலா்) மதிப்பில் செய்யப்பட்ட அறிதிறன்பேசி ஏற்றுமதி, ஆகஸ்டில் ரூ. 8,560 கோடியாக (964.8 மில்லியன் டாலா்) சரிந்துள்ளது. இதுபோல், இந்திய மருந்துப் பொருள்களின் அமெரிக்க ஏற்றுமதி கடந்த 4 மாதங்களில் 13.3 சதவீதமாக சரிந்துள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரிவிலக்கு அளிக்கப்பட்ட இந்திய பொருள்களின் அமெரிக்க ஏற்றுமதி சரிந்துள்ளது வழக்கத்துக்கு மாறானது. இது மிகுந்த கவலைக்குரிய விஷயமாகும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

மக்களுக்கு மகிழ்ச்சி என்றால் ஜிஎஸ்டி சீர்திருத்தத்துக்கான பெருமையை காங்கிரஸ் எடுத்துக்கொள்ளலாம்: பாஜக

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக காங்கிரஸார் கருதினால் இதற்கான பெருமையை அவர்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று பாஜக தெரிவித்துள்ளது.ஜிஎஸ்டி விகிதங்களைக் குறைக்கும் ... மேலும் பார்க்க

உலகளாவிய புத்தாக்கக் குறியீடு: விரைவில் இந்தியா முன்னிலை- அமித் ஷா நம்பிக்கை

உலக அளவில் புத்தாக்கக் குறியீட்டில் அடுத்த 3 ஆண்டுகளில் 10 முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.குஜராத் மாநில அரசு காந்திநகரில் ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் போதிய வசதியின்றி பிரசவம்: தில்லி அரசுக்கு என்எச்ஆர்சி நோட்டீஸ்

நமது நிருபர்தில்லியில் உள்ள ஐஹெச்பிஏஎஸ். மருத்துவமனையில் போதிய வசதியின்றி சிசு பிறந்ததாக ஊடகத்தில் வெளியான செய்தியைத் தொடர்ந்து, தேசிய மனித உரிமை ஆணையம் (என்எச்ஆர்சி) தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்... மேலும் பார்க்க

சட்டவிரோத மணல் குவாரி விவகாரம்: அமலாக்கத் துறை மனு தள்ளுபடி

நமது நிருபர்தமிழகத்தில் சட்டவிரோத மணல் குவாரி விவகாரத்தில், பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் மணல் குவாரி ஒப்பந்ததாரர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்வதற்கும், அவர்களது சொத்துகளை முடக்குவதற்கும் செ... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான நடிகையின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

நமது நிருபர்பாலியல் புகார் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை எதிர்த்து நடிகை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ள... மேலும் பார்க்க

ராணுவம், தூதரகங்களின் முத்திரையுடன் போலி ஆவணம்: கேரளத்தில் 36 சொகுசு காா்கள் பறிமுதல்

பூடானில் இருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட 36 சொகுசு காா்கள் கேரளத்தில் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வாகனங்களை இந்தியாவில் பதிவு செய்ய இந்திய ராணுவம், அமெரிக்கா உள்ளிட்ட... மேலும் பார்க்க