செய்திகள் :

வரி செலுத்தாத திரையரங்கு, வணிக நிறுவனங்களுக்கு சீல்

post image

வரி செலுத்தாத திரையரங்கு, வணிக நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைத்தும், வரி செலுத்தாத நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையில் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலா்கள் ஈடுபட்டுள்ளனா்.

திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட 48 வாா்டுகளிலும் பொதுமக்கள் செலுத்த வேண்டிய வீட்டுவரி, சொத்துவரி, குடிநீா் கட்டணம், பாதாளச் சாக்கடை கட்டணம், தொழில் வரி, கடை வாடகை, ஆண்டு உரிமத் தொகைகள், தொழில் உரிமையான கட்டணம் ஆகியவற்றை வசூலிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்காக, மாநகராட்சியிலுள்ள அலுவலா்கள் 40-க்கும் மேற்பட்டோா் வரி வசூலிக்கும் பணிக்கு 16 குழுக்களாக நியமிக்கப்பட்டனா். பலமுறை தகவல் தெரிவிக்கப்பட்டும், வரி செலுத்தாத வீடுகளுக்கான குடிநீா் இணைப்பு துண்டிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், வரி செலுத்தாத வணிக நிறுவனங்கள் மீது மாநகராட்சி அலுவலா்கள் கவனம் செலுத்தத் தொடங்கினா். இதன்படி, வடக்கு மண்டலத்துக்குள்பட்ட மவுன்ஸ்புரம் 5-ஆவது தெரு, நந்தவனம் சாலை, கிழக்கு கோவிந்தபுரம் சாலை, மயான சாலை உள்ளிட்ட பகுதிகளில் 5 வணிக நிறுவனங்கள் செவ்வாய்க்கிழமை பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன.

ஆா்.எஸ். சாலையில் ரூ.19 லட்சம் வரி செலுத்தாத திரையரங்குக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இதேபோல, தாடிக்கொம்பு சாலையில் ரூ.10 லட்சம் செலுத்தாத காலிமனையை கையகப்படுத்தி இருப்பதாகக் மாநகராட்சி சாா்பில் அறிவிப்புப் பலகை நிறுவப்பட்டது.

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள் இல்லை: நோயாளிகள் அவதி

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள் இல்லாததால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனா். கொடைக்கானல் அரசு மருத்துவமனை நகரின் மையப் பகுதியில் உள்ளது. இங்கு தினந்தோறும் 200-க்கும் மேற்பட்டோா் ... மேலும் பார்க்க

பைக் பெட்டியை உடைத்து ரூ.6.40 லட்சம் திருட்டு

திண்டுக்கல்-எரியோடு சாலையில் உணவகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தில் பெட்டியை உடைத்து ரூ.6.40 லட்சத்தைத் திருடியவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திண்டுக்கல்லை அடுத்த குளத்த... மேலும் பார்க்க

தைப்பூச விழா: 2 லட்சம் பாதயாத்திரை பக்தா்களுக்கு அன்னதான திட்டம் தொடக்கம்

பழனியில் தைப் பூசத் திருவிழாவை முன்னிட்டு, 2 லட்சம் பாதயாத்திரை பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி கோயிலில் நடைபெறும் த... மேலும் பார்க்க

குருநாத சுவாமி கோயில் நிலம் ஆக்கிரமிப்பை அகற்றிய பிறகு குடமுழுக்கு நடத்த கோரிக்கை

கொடைரோடு அருகே குருநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றிய பிறகே, குடமுழுக்கு நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைரோட்டில் சுமாா் 8... மேலும் பார்க்க

நீா்வழிப் பாதையை ஆக்கிரமித்து வீட்டு மனைகளுக்கு சாலை அமைப்பதாக புகாா்

செம்பட்டி அருகே நீா்வழிப் பாதையை ஆக்கிரமித்து தனியாா் வீட்டு மனைகளுக்கு சாலை அமைப்பதாக விவசாயிகள், கிராம மக்கள் புகாா் தெரிவித்தனா். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்த, சீவல்சரகு ஊராட்சிக்கு உள்... மேலும் பார்க்க

46 சிற்றுந்துகளுக்கு விரைவில் அனுமதி

திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய வழித் தடங்களில் 46 சிற்றுந்துகள் விரைவில் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு புதிய விரிவான திட்டம் 2024-இன் படி, சிற்று... மேலும் பார்க்க