செய்திகள் :

வரி விதிப்பு நடவடிக்கை: இந்தியாவுக்கும் செக்! டிரம்ப் அதிரடி!

post image

வாஷிங்டன் : அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைகளை எதிர்த்து யாரும் தம்மிடம் கேள்வி கேட்க முடியாது என்று அந்நாட்டின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு பல்வேறு நாடுகளுக்கு எதிராக சில கடுமையாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா். முக்கியமாக சில குறிப்பிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அதிகபட்ச வரி விதிக்கும் நடவடிக்கையை தொடங்கிவிட்டார். அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கையால் இந்தியாவும் பாதிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபருடன் மிக நெருக்கமாக நட்பு பாராட்டி வரும் உலக பெரும் கோடீஸ்வரரான பன்னாட்டு தொழிலதிபர் எலான் மஸ்க்குடன் சேர்ந்து டிரம்ப் அளித்துள்ள பேட்டியில் பேசியதாவது:

“பிரதமர் நரேந்திர மோடியிடம் நான் தெளிவாகவே தெரிவித்துவிட்டேன். அவர் அப்போது அமெரிக்காவில்தான் இருந்தார். அவரிடம் நான், ‘அமெரிக்கா செய்யப்போவது இதுதான், நீங்கள் என்னவெல்லாம் வரி வசூலிக்கிறீர்களோ அதையே நானும் செய்கிறேன்’ என்று தெரிவித்துவிட்டேன். ஒவ்வொரு நாட்டுக்கும் இந்த நடவடிக்கை பொருந்தும். இவ்விவகாரத்தில் என்னுடன் எவரும் வாதிட முடியாது” என்றார்.

இலங்கைக்கு கடத்தவிருந்த 2.8 டன் மஞ்சள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான 2.8 டன் சமையல் மஞ்சள் மூட்டைகளை சுங்கத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்க... மேலும் பார்க்க

கோவிட்-19 தீநுண்மியைப் போல வௌவால்களில் மற்றொரு தீநுண்மி!

கோவிட்-19 தொற்று தீநுண்மியுடன் ஒத்த மற்றொரு தீநுண்மி கண்டறியப்பட்டுள்ளதாக பிரபல ஆராய்ச்சி வல்லுநர் தெரிவித்துள்ளார்.உலகையே ஆட்டிப் படைத்த கரோனா தொற்றின்போல வேறொரு வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக... மேலும் பார்க்க

சட்டவிரோதக் குடியேற்றம்: பள்ளி நண்பர்களின் கேலியால் சிறுமி தற்கொலை!

சட்டவிரோதக் குடியேற்ற நடவடிக்கைக்கு பயந்து அமெரிக்க பள்ளி மாணவி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜோஸ்லின் ரோஜோ கரன்ஸா என்ற பதினொரு வயது சிறுமி, அமெரிக்காவில் டெக்ஸாஸ் நகரில் இடைநிற்றல்... மேலும் பார்க்க

எஃப்பிஐ இயக்குநரான காஷ் படேல்... ஹிந்தி பாடலைப் பகிர்ந்து டிரம்ப் உதவியாளர் வாழ்த்து!

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ-யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த காஷ் படேல் தேர்ந்தெடுக்கபட்டதற்கு ஹிந்தி பாடலைப் பகிர்ந்து டிரம்ப் உதவியாளர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அம... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்குக்கு ஒத்திகையா?

போப் பிரான்சிஸ் கடுமையான நிமோனியா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வரு நிலையில், அவரின் இறுதிச் சடங்குக்கு ஸ்வீஸ் காவலர்கள் ஒத்திகை பார்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.போ... மேலும் பார்க்க

ஆசியாவின் ஆழமான கிணற்றை 580 நாள்களில் தோண்டிய சீனா!

ஆசியாவின் மிக ஆழமான கிணற்றை வெறும் 580 நாள்களில் தோண்டு சீன அரசின் தேசிய பெட்ரோலியக் கழகம் சாதனை படைத்துள்ளது.மொத்தம் 10,910 மீட்டர் ஆழமுள்ள இந்த கிணற்றின் கடைசி 910 மீட்டரை தோண்டுவதற்கு கிட்டத்திட்ட ... மேலும் பார்க்க