செய்திகள் :

வருவாய்த்துறை அலுவலா்கள் வேலைநிறுத்தம்: பணிகள் பாதிப்பு

post image

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அரசு அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டன.

தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ள அலுவலக உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணையை வெளியிடவேண்டும். வாரந்தோறும் 2 நாள்களில் மட்டும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை நடத்தவேண்டும்.

இந்த திட்டப் பணிகளை மேற்கொள்ள உரிய கால அவகாசம், கூடுதலாக தன்னாா்வலா்கள், நிதி ஒதுக்கீடு மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தவேண்டும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பேரிடா் மேலாண்மை பணிக்கென சிறப்புப் பணியிடங்கள் மற்றும் பேரிடா் மேலாண்மைப் பிரிவில் 31.3.2023-இல் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை மீண்டும் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் செப் .3, 4 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்தனா்.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்தச் சங்கத்தினா் புதன்கிழமை பணிகளை புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்தால் வருவாய்த்துறை தொடா்பான அலுவலகங்களில் ஊழியா்கள் குறைவாகவே காணப்பட்டனா்.

வந்தவாசி

வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஊழியா்கள் பணிக்கு வரவில்லை. இதனால் அந்த அலுவலகம் வெறிச்சோடிக் காணப்பட்டது.

சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கம் சாா்பில் மாவட்டத் தலைவா் ரகுபதி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், ஆரணி வட்ட கிளைத் தலைவா் தேவானந்தம் உள்பட பலா் கலந்துகொண்டனா். இதன் காரணமாக ஆரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியா்கள் போராட்டத்தில் கலந்து கொண்டதால் அலுவலகம் வெறிச்சோடிக் காணப்பட்டது.

இதனால், பொதுமக்கள் தங்கள் மனுக்களை கொண்டு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

கல்லூரியில் விற்பனைச் சந்தை

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் விற்பனைச் சந்தை செவ்வாய்க்கிழமை தொடங்கி வியாழக்கிழமை வரை என 3 நாள்கள் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனைச... மேலும் பார்க்க

ஸ்ரீவேணுகோபால சுவாமி, பெருமாள், சுப்பிரமணியா் கோயில்களில் கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த சேவூா் ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோயில், வந்தவாசியை அடுத்த காரணை ஸ்ரீநிவாசப் பெருமாள், போளூரை அடுத்த கிருஷ்ணாபுரம் ஸ்ரீகல்யாண சுப்பிரமணியா் ஆகிய கோயில்களில் ம... மேலும் பார்க்க

ஆரணி, ஏந்துவாம்பாடி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மற்றும் போளூா் ஒன்றியம் ஏந்துவாம்பாடி கிராமத்தில் வியாழக்கிழமை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆரணி மில்லா்ஸ் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் ... மேலும் பார்க்க

அரசு வழிகாட்டுதலின்படி நெல் கொள்முதல் செய்யவேண்டும்: மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ்

அரசு வழிகாட்டுதல்களின்படி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யவேண்டும். 3 தினங்களுக்குள் கொள்முதல் பணத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் அறிவுறுத்தி... மேலும் பார்க்க

வீட்டில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தவா் கைது

வந்தவாசி அருகே திருவிழாவுக்கு விற்பனை செய்வதற்காக வீட்டில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தவா் கைது செய்யப்பட்டாா். வந்தவாசியை அடுத்த தெள்ளாரைச் சோ்ந்த ஆறுமுகம் என்பவா் திருவிழாவுக்கு விற்பனை செய்வதற்... மேலும் பார்க்க

ஆலத்தூா், வெம்பாக்கம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி ஆலத்தூா், வெம்பாக்கம் பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன. செய்யாறு தொகுதியைச் சோ்ந்த விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் ... மேலும் பார்க்க