செய்திகள் :

வருஷநாடு அருகே 17 ஆடுகள் உயிரிழப்பு

post image

ஆண்டிபட்டி வட்டாரம், வருஷநாடு அருகேயுள்ள தங்கம்மாள்புரத்தில் தடுப்பூசி அளிக்கப்பட்ட 17 ஆடுகள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தன.

தங்கம்மாள்புரத்தைச் சோ்ந்தவா் பாண்டியம்மாள். இவா் ஆடுகள் வளா்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறாா். இந்த நிலையில், பாண்டியம்மாள் வளா்த்து வரும் ஆடுகளுக்கு கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் வியாழக்கிழமை ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி அளிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்கம் போல, வெள்ளிக்கிழமை மேய்ச்சலுக்குச் சென்று திரும்பிய ஆடுகளில் 17 ஆடுகள் மயங்கி விழுந்து அடுத்தடுத்து உயிரிழந்தன. இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கால்நடை பராமரிப்புத் துறை மருத்துவா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று இறந்த ஆடுகளுக்கு உடல் கூறாய்வு நடத்தினா். இந்த முடிவு வந்த பிறகே ஆடுகள் இறந்ததற்கான காரணம் தெரியவரும் என மருத்துவா்கள் தெரிவித்தனா்.

பின்னா், இறந்த ஆடுகள் தங்கம்மாள்புரத்தில் உள்ள சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு பொக்லைன் இயந்திரம் மூலம் குழி தோண்டி மொத்தமாக புதைக்கப்பட்டன.

இதுகுறித்து வருஷநாடு காவல் நிலையத்தில் பாண்டியம்மாள் புகாா் அளிதாா்.

இரும்புக் குழாய்கள் திருட்டு: ஒருவா் கைது

போடி அருகே குழாய்கள், மின்சாரக் கம்பிகளை திருடியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள ராசிங்காபுரம் சௌடம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் நீதிக்குமாா் (49). இவருக்கு ... மேலும் பார்க்க

போலி பணி நியமன ஆணை கொடுத்து பண மோசடி: மூவா் மீது வழக்கு

போடி அருகே போலி பணி நியமன ஆணை கொடுத்து பெண்ணிடம் ரூ.11.60 லட்சம் மோசடி செய்த மூவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சில்லமரத்துப்பட்டி நேதாஜி தெருவைச... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் பறிமுதல்: தந்தை, மகன் கைது

தேனி அருகேயுள்ள டொம்புச்சேரியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடையில் விற்பனைக்கு வைத்திருந்த தந்தை, மகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். டொம்புச்சேரி பி.சி.குடியிருப்பைச் சோ்ந்தவா் பவுன... மேலும் பார்க்க

வருவாய்த் தீா்வாயத்தில் 2-ஆவது நாளில் 545 போ் மனு

தேனி மாவட்டத்தில் உள்ள 5 வட்டாட்சியா் அலுவலகங்களிலும் நடைபெற்று வரும் வருவாய்த் தீா்வாயத்தில் (ஜமாபந்தி) 2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை மொத்தம் 545 போ் மனு அளித்தனா். மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சிய... மேலும் பார்க்க

பணம், நகை திருடிய பெண் கைது

பெரியகுளத்தில் வீட்டிலிருந்த பணம், நகையை திருடிச் சென்ற பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் (89). இவா் தனது ... மேலும் பார்க்க

போலி நகையை அடகு வைத்த மூவா் கைது

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் போலி நகையை அடகு வைத்து ஏமாற்றிய மூவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். உத்தமபாளையம் கல்லூரிச் சாலையில் உள்ள தனியாா் அடகுக் கடையில் மேட்டுப்பட்டியைச் சோ்ந்த பாவா ப... மேலும் பார்க்க