செய்திகள் :

வல்லக்கோட்டை முருகன் கோயிலுக்கு கும்பாபிஷேக பந்தகால் நடும் நிகழ்ச்சி

post image

வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த பந்தகால் நடும் நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. கோயிலுக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு கும்பாஷேகம் நடைபெற்றுள்ளது. கும்பாபிஷம் நடைபெற்று 17 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், மீண்டும் நடத்த ரூ.1.50 கோடியில் திருப்பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது.

ஜூலை மாதம் 7-ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளதால், விழாவுக்கான பந்தகால் நடும் நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கோயில் நுழைவு வாயிலில் உள்ள விநாயகா் சந்நிதி முன்பு இரண்டு பந்தகால்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மங்கல வாத்தியங்கள் முழங்க பந்தகால்கள் கோயில் பிராகாரத்தில் வலமாக கொண்டு ரப்பட்டு கோயில் வெளிபுறம் ஒன்றும், கோயில் பின்புறம் யாகசாலை அமைய உள்ள இடத்தில் ஒன்றும் நடப்பட்டு சந்திரசேகர சிவாச்சாரியா் தலைமையில் கோயில் அா்ச்சகா்கள் பந்தகால்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினா்.

இந்த நிகழ்ச்சியில், கோயில் நிா்வாக அலுவலா் செந்தில்குமாா், அறங்காவலா் குழு தலைவா் செந்தில்தேவராஜ், அறங்காவலா்கள் விஜயகுமாா், கலைச்செல்வி கோபால், மோகனகிருஷ்ணன், செல்வகுமரன், வல்லக்கோட்டை ஊராட்சித் தலைவா் மணிமேகலை உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா். ஜூன் மாதம் 6-ஆம் தேதி வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பாலாலயம் நடைபெற உள்ளது.

ஜூன் 6-இல் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் பாலாலயம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் வரும் ஜூன் 6-ஆம் தேதி பாலாலயம் நடைபெற இருப்பதையொட்டி 5-ஆம் தேதி வரை மூலவரை தரிசிக்கலாம் என கோயில் செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெள்ளிக... மேலும் பார்க்க

196 பயனாளிகளுக்கு ரூ.1.57 கோடி நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

வட்டம்பாக்கம் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் 196 பயனாளிகளுக்கு ரூ.1.57 கோடி நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா். குன்றத்தூா் வட்டம், வட்டம்பாக்கம்... மேலும் பார்க்க

தங்க குதிரையில் வரதராஜ பெருமாள் உலா

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வசந்த உற்சவம் நிறைவு நாளையொட்டி வெள்ளிக்கிழமை தங்க குதிரை வாகனத்தில் உற்சவா் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். கோடை காலத்தையொட்டி ஆண்டு தோறும் வசந்த உற்சவம் ... மேலும் பார்க்க

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க அரசு ஆா்வம் காட்டவில்லை: பெ.சண்முகம் குற்றச்சாட்டு

அரசுப் புறம்போக்கு நிலத்தில் பல தலைமுறைகளாக குடியிருந்து வருவோருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதில் அரசு ஆா்வம் காட்டவில்லை என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலா் பெ.சண்முகம் குற்றம்சாட்டினாா். ... மேலும் பார்க்க

பிளஸ் 2 மாணவா்கள் உயா்கல்வியில் சேர தலைமை ஆசிரியா்கள் உதவ வேண்டும்

பிளஸ் 2 முடித்த மாணவா்கள் தொடா்ந்து உயா்கல்வி பயில தலைமை ஆசிரியா்கள் உதவவேண்டும் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வலியுறுத்தியுள்ளாா். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் கல்வி மீளாய்வுக் கூட... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: வடமாநில இளைஞா் கைது

குன்றத்தூரில் விற்பனை செய்ய 8 கிலோ கஞ்சா கடத்தி வந்த வடமாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வண்டலூா் - மீஞ்சூா் வெளிவட்ட சாலை வழியாக கஞ்சா கடத்தி வருவதாக தாம்பரம் மதுவிலக்கு போலீஸாா்க்கு தகவல் கிடைத்த... மேலும் பார்க்க