செய்திகள் :

வளர்ச்சித் திட்டங்கள் மறுஆய்வு: ஜம்மு-காஷ்மீரில் அமித் ஷா தலைமையில் முக்கிய கூட்டம்!

post image

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டங்களை மறுஆய்வு செய்வதற்கான உயர்நிலைக் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தொடங்கியது.

ஆளுநர் மாளிகையில் நடைபெறும் கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீரின் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, முதல்வர் உமர் அப்துல்லா, மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் காஷ்மீர் அரசின் மூத்த அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார்கள்.

இந்த கூட்டத்தில், யூனியன் பிரதேசத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து உள்துறை அமைச்சரிடம் அதிகாரிகள் விளக்குவார்கள்.

ஜம்மு காஷ்மீருக்கு மூன்று நாள் பயணமாகச் சென்றுள்ள ஷா, திங்கள்கிழமை மாலை பள்ளத்தாக்குக்கு வந்தடைந்தார். கடந்த 2023ல் பயங்கரவாதிகளுடன் போரிட்டு உயிர் தியாகம் செய்த கீர்த்தி சக்ரா விருது பெற்ற துணை காவல் கண்காணிப்பாளர் ஹுமாயூன் முசம்மில் பட்டின் வீட்டிற்கு ஷா சென்றார். கொல்லப்பட்ட காவல் அதிகாரியின் தந்தை, ஓய்வுபெற்ற காவல் துறைத் தலைவர் குலாம் ஹசன் பட்டுடன் அவர் கலந்துரையாடினார். பின்னர் ஆளுநர் மாளிகைக்குச் சென்றார்.

கீர்த்தி சக்ரா விருது பெற்ற பட், செப்டம்பர் 2023இல் தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகர்நாக் என்ற கடூல் கிராமத்தைச் சுற்றியுள்ள அடர்ந்த வளத்தில் பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு வீரமரணம் அடைந்த நான்கு பாதுகாப்புப் படையினரில் ஒருவர் ஆவார்.

மேலும் இன்று நடைபெறும் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் காஷ்மீரின் பாதுகாப்பு நிலைமையை உயர் பாதுகாப்புப் படையினர், காவல்துறை அதிகாரிகளுடனான சந்திப்பில் மறு ஆய்வு செய்ய உள்ளார். அமித் ஷாவின் வருகைக்காகக் காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, ஏராளமான ஆயுதமேந்திய வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உ.பி.: 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மூடல்

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் தகுதியில்லாத நபா்களால் நடத்தப்பட்டுவந்த 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட தலைமை மருத்து அதிகாரி தருண் கு... மேலும் பார்க்க

ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்திருக்கும் ஆயுத ஏற்றுமதி: ராஜ்நாத் சிங்

‘2014-ஆம் ஆண்டில் ரூ. 600 கோடியாக இருந்த ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாட ஏற்றுமதி தற்போது ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்துள்ளது’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

வணிகா்களுக்கு 7 நாள்களுக்குள் ஜிஎஸ்டி பதிவு: அதிகாரிகளுக்கு சிபிஐசி அறிவுறுத்தல்

வணிகா்கள் விண்ணப்பித்த 7 நாள்களுக்குள் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) அறிவுறுத்தியுள்ளது. ஜிஎஸ்டி பதிவில் ... மேலும் பார்க்க

நியோமேக்ஸ் மோசடி வழக்கு: ரூ.600 கோடி சொத்து முடக்கம் அமலாக்கத் துறை நடவடிக்கை

பண மோசடியில் ஈடுபட்ட மதுரையைச் சோ்ந்த நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. மதுரை எஸ்.எஸ்.காலனியை தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவ... மேலும் பார்க்க

பஞ்சாபில் பயங்கரவாத தாக்குதல்களில் தொடா்புடைய இந்தியா் அமெரிக்காவில் கைது

பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடா்புடையதாக இந்தியாவால் தேடப்பட்டு வரும் சீக்கியரை அமெரிக்காவில் அந்நாட்டு புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ கைது செய்துள்ளது. பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ... மேலும் பார்க்க

‘யுனெஸ்கோ’ உலக நினைவுப் பதிவேட்டில் பகவத் கீதை, நாட்டிய சாஸ்திரம்: பிரதமா் மோடி பெருமிதம்

‘யுனெஸ்கோ’ உலக நினைவுப் பதிவேட்டில் பகவத் கீதை மற்றும் பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் ஆகியவற்றின் அரிய கையெழுத்துப் பிரதிகள் சோ்க்கப்பட்டுள்ளன. இது, ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமைக்குரிய தருணம் என்று... மேலும் பார்க்க