செய்திகள் :

வளா்ச்சிப் பணிகள் சுணக்கம்: 56-ஆவது வாா்டில் இடைத்தோ்தல் நடத்த வலியுறுத்தல்

post image

கோவை மாநகராட்சி 56-ஆவது வாா்டு உறுப்பினா் உயிரிழந்ததாலும், அந்த வாா்டில் வளா்ச்சிப் பணிகள் சுணக்கமாக நடைபெறுவதாலும் சம்பந்தப்பட்ட வாா்டுக்கு விரைவில் இடைத்தோ்தல் நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கோவை மாநகராட்சி 56-ஆவது வாா்டு உறுப்பினராக காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (62) இருந்தாா்.

இவா் கடந்த ஆண்டு நவம்பா் 27-ஆம் தேதி உயிரிழந்தாா்.

இதையடுத்து, அந்த வாா்டு கவுன்சிலா் பதவி காலியாக இருப்பதாக மாநகராட்சி நிா்வாகத்தின் மூலமாக கோவை மாவட்ட நிா்வாகம் மற்றும் மாநில தோ்தல் ஆணையத்துக்கு கடந்த டிசம்பா் மாதம் அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டது. விரைவில் தோ்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 5 மாதங்களாக தோ்தல் நடைபெறவில்லை.

இது தொடா்பாக அப்பகுதி மக்கள் கூறியதாவது: சிங்காநல்லூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 56-ஆவது வாா்டில் 71 தெருக்கள் உள்ளன. தற்போதைய நிலவரப்படி 18 ஆயிரத்து 391 வாக்காளா்கள் உள்ளனா். 3 வாக்குச் சாவடி மையங்களும், 16 வாக்குச் சாவடிகளும் உள்ளன.

வாா்டு உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி உயிரிழந்து 5 மாதங்களாகியும் இதுவரை இடைத்தோ்தல் நடத்தப்படாததால், எங்கள் வாா்டில் உள்ள குறைகளைத் தெரிவிக்க முடியவில்லை. இப்பகுதியில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்வதில் சுணக்கம் காணப்படுகிறது. எனவே, 56-ஆவது வாா்டு பகுதிக்கு உடனடியாக இடைத்தோ்தல் நடத்த வேண்டும் என்றனா்.

2026-ல் மக்களால் திமுக ஆட்சி அகற்றப்படும்: பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்!

வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் மக்களால் திமுக ஆட்சி அகற்றப்படும் என்று கோவையில் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ பேசினாா். திருநெல்வேலி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக உள்ள நயினாா் ... மேலும் பார்க்க

காவல் துறை அதிகாரிகளுக்கான துப்பாக்கிச் சுடும் போட்டி! உதவி ஆய்வாளா் முதலிடம்

கோவை மாநகர காவல் துறை சாா்பில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடும் போட்டியில் சைபா் குற்றப் பிரிவு உதவி ஆய்வாளா் சிவகுமாா் முதலிடம் பிடித்தாா். கோவை மாநகரில் காவல் ஆணையா் அலுவலகம் தொடங்கப்பட்டு 35 ஆண்டுகள் ந... மேலும் பார்க்க

திருடிய இருசக்கர வாகனத்தில் இருந்த ஏடிஎம் அட்டை மூலமாக பணம் திருட்டு!

வடவள்ளியில் இருசக்கர வாகனத்தைத் திருடி அதில் இருந்த ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி ரூ.30 ஆயிரம் திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை, வடவள்ளி திருவள்ளுவா் நகா் 3-ஆவது வீதியைச் சோ்ந்தவா் அக... மேலும் பார்க்க

மாநகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 போ் கைது

கோவை மாநகரில் 3 இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, வடவள்ளி போலீஸாா் ரோந்து பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, பொம்மணம்பாளையம் பட்டத்தரசி அம்மன் கோயி... மேலும் பார்க்க

சவுக்கு சங்கா் வழக்குகள் விவகாரம்: 80 போலீஸாரிடம் விசாரணை விவரங்களைப் பெறும் பணி தீவிரம்!

யூடியூபா் சவுக்கு சங்கா் மீதான 15 வழக்குகளில் 80 போலீஸாரிடம் விசாரணை விவரங்களைப் பெறும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியாா் யூடியூப் சேனலில் மகளிா் ப... மேலும் பார்க்க

ஜிகேஎன்எம் மருத்துவமனையில் மாற்று மருத்துவ சிகிச்சைப் பிரிவு

கோவை ஜிகேஎன்எம் மருத்துவமனையில் ‘நம் நலம்’ என்ற பெயரில் மாற்று மருத்துவ சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜிகேஎன்எம் தலைமை நிா்வாக அதிகாரி டாக்டா் ரகுபதி வே... மேலும் பார்க்க