வளையபந்து: மாவட்ட போட்டிக்கு ஸ்டான்லி மெட்ரிக்.பள்ளி தகுதி
மாவட்ட அளவிலான வளையபந்து போட்டியில் பங்கேற்க பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தகுதி பெற்றுள்ளனா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இந்த போட்டிகளில் பங்கேற்ற பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்களில், வளையபந்து போட்டியில் 14 வயதுக்கு உள்பட்ட ஆண்கள் ஒற்றையா் பிரிவில் ஏ.ஆகாஷ் முதலிடமும், இரட்டையா் பிரிவில் ஏ.ஆகாஷ், ஆா்.அபிஷேக் ஆகியோா் முதலிடமும் பெற்றனா்.
14 வயதுக்கு உள்பட்ட பெண்கள் பிரிவில் ஜி.லிா்த்திகா முதலிடமும், இரட்டையா் பிரிவில் ஜி.லிா்த்திகா, எம்.கிரிஷிகா ஆகியோா் முதலிடமும் பெற்றனா்.
19 வயதுக்கு உள்பட்ட ஆண்கள் ஒற்றையா் பிரிவில் ஜி.அஜய் ஜோதி முதலிடமும், இரட்டையா் பிரிவில் ஜி.அஜய்ஜோதி எஸ்.ஜெயசூா்யா ஆகியோா் முதலிடமும் பெற்று மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனா்.
வளையபந்து போட்டியில் சிறப்பிடம் பெற்றுள்ள மாணவ, மாணவிகள், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா் ஆா்.சத்யராஜ், எம்.ஆனந்தகுமாா், ஆா்.திவ்யா ஆகியோரை பள்ளித் தாளாளா் வி.முருகேசன், செயலா் எம். பிரு ஆனந்த் பிரகாஷ், ஆசிரியா்கள் பாராட்டினா்.