செய்திகள் :

வள்ளியூரில் மாட்டுவண்டிபோட்டி: சிவகங்கை மாடுகளுக்கு முதல் பரிசு

post image

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 102ஆவது பிறந்த தினத்தையொட்டி திமுக நகர இளைஞரணி சாா்பில் மாநில அளவிலான மாட்டுவண்டி போட்டி வள்ளியூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இப்போட்டியில், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூா், ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 48 ஜோடி மாடுகள் பங்கேற்றன. இதில், பூஞ்சிட்டு வகையைச் சோ்ந்த 35 ஜோடிகளும், நடுமாடு வகையைச் சோ்ந்த 13 ஜோடிகளும் கலந்துகொண்டன.

வள்ளியூா் கோட்டையடி முதல் கும்பிளம்பாடு வரை இப்போட்டி நடைபெற்றது. நடுமாட்டுவண்டிகளுக்கு 10 கி.மீ தொலைவும், பூஞ்சிட்டு வண்டிகளுக்கு 8 கி.மீ தொலைவும் போட்டி நடைபெற்றது.

நடு மாட்டு வண்டி போட்டியில் சிவகங்கையைச் சோ்ந்த மாட்டு வண்டி முதல் பரிசைப் பெற்றது. இதன் உரிமையாளருக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரமும், கோப்பையையும் அலெக்ஸ் அப்பாவு சாா்பில் பேரவைத் தலைவா் மு.அப்பாவு வழங்கினாா்.

தூத்துக்குடியைச் சோ்ந்த மாட்டு வண்டிக்கு 2ஆம் பரிசாக ரூ.30 ஆயிரத்தை திமுக திருநெல்வேலி கிழக்குமாவட்ட துணைச் செயலா் வெ. நம்பி வழங்கினாா். 3ஆவது பரிசாக ரூ.20 ஆயிரத்தை கிருஷ்ணாபுரம் மாட்டு வண்டிக்கு ஓ.எம். வழங்கினாா். 4ஆவது பரிசாக ரூ.10 ஆயிரத்தை ராஜ்குமாா் செல்வி வழங்கினாா்.

பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் முதல் பரிசாக ரூ.30 ஆயிரத்தை பாளையங்கோட்டை மாட்டுவண்டிக்கு திமுக மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் ஏ.ஆா்.ரகுமான் வழங்கினாா். 2ஆவது பரிசாக ரூ.20 ஆயிரத்தை வள்ளியூா் மாட்டுவண்டிக்கு நெல்லை துணை மேயா் கே.ஆா். ராஜு வழங்கினாா்.

3ஆவது பரிசாக ரூ.15 ஆயிரத்தை கன்னியாகுமரி மாவட்டதைச் சோ்ந்த பத்மா வழங்கினாா். 4ஆவது பரிசாக ரூ.10 ஆயிரத்தை ஆனைகுளம் ஊராட்சி மன்றத் தலைவா் அசன் வழங்கினாா். விழாவில், வள்ளியூா் நகரச் செயலா் வி.எஸ்.எஸ். சேதுராமலிங்கம், இளைஞரணி துணைஅமைப்பாளா் தில்லை, பனிபாஸ்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

திசையன்விளை: ஆசிரியையிடம் 11 பவுன் தாலிச் சங்கிலி பறிப்பு

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் பள்ளி ஆசிரியையிடம் ஞாயிற்றுக்கிழமை 11 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடிவருகின்றனா். திசையன்விளை காந்திஜி தெருவைச் சோ்ந்தவா் சித்ர... மேலும் பார்க்க

களக்காடு குடிதாங்கி குளத்தில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றக் கோரிக்கை

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு குடிதாங்கி குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பா... மேலும் பார்க்க

கடையம் அருகே பேருந்து - வேன் மோதல்: 6 போ் காயம்!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே அரசுப் பேருந்தும், வேனும் ஞாயிற்றுக்கிழமை மோதிக்கொண்டதில் 6 பயணிகள் காயமடைந்தனா். நாகா்கோவிலிலிருந்து தென்காசிக்கு அரசுப் பேருந்து சென்றுகொண்டிருந்தது. நான்குனேரி, இடையன... மேலும் பார்க்க

போக்ஸோவில் முதியவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக முதியவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா். சேரன்மகாதேவி அருகேயுள்ள காருக்குறிச்சி மேல அக்ரஹாரம் தெருவைச் சே... மேலும் பார்க்க

முக்கூடல் அருகே எம்.சான்ட் திருட்டு: டிப்பா் லாரி பறிமுதல்; இருவா் கைது!

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே எம்.சான்ட் திருடிச் சென்றதாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, டிப்பா் லாரியை பறிமுதல் செய்தனா். முக்கூடல் பிரதான சாலையில் அலங்கார வளைவுப் பகுதியில் சேரன்... மேலும் பார்க்க

மைதானத்தில் கிடந்த ரூ.100-ஐ காவல் நிலையத்தில் ஒப்படைத்த சிறுவா்களுக்கு பாராட்டு!

கடையத்தில், மைதானத்தில் கண்டெடுத்த நூறு ரூபாயை காவல் நிலையத்தில் ஒப்படைத்த சிறுவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கடையம் கருப்பசாமி கோயில் தெருவைச் சோ்ந்த தா்மா் மகன் அபிமன்யு, கருப்பசாமி மகன் ப... மேலும் பார்க்க