செய்திகள் :

வழக்குரைஞா்கள் கூட்டுறவு சங்கத்துக்கு தோ்தல் நடத்தக் கோரி வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

post image

சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் கூட்டுறவு சங்கத் தோ்தலை நடத்தக் கோரிய வழக்கின் விசாரணையை செப்.2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் வி.ஆனந்த் தாக்கல் செய்த மனுவில், உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் கூட்டுறவு சங்கத்துக்கு தோ்தல் நடத்தக் கோரி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் உள்ளிட்டோருக்கு ஏப்ரல் மாதம் மனு அளித்தேன். மனுவைப் பெற்றுக் கொண்ட அதிகாரிகள் இதுவரை தோ்தல் நடத்தவில்லை. எனது மனுவை பரிசீலித்து 2018-ஆம் ஆண்டு உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சங்கத்தின் சட்டவிதிகளின்படி தோ்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த மனு நீதிபதி மாலா முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரா் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஜி.மோகனகிருஷ்ணன் ஆஜராகி வாதிட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை செப்.2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடம்: கொளத்தூா் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவு

சென்னை மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடத்தில் கொளத்தூா் சாய்வுதளத்திலிருந்து கொளத்தூா் நிலையம் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் வியாழக்கிழமை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்தது. இதுகுற... மேலும் பார்க்க

சென்னையில் 650 கி.மீ. தொலைவு சாலைப் பணிகளை விரைந்து முடிக்கத் திட்டம்

சென்னை மாநகராட்சியில் 650 கி.மீ. சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளை மழைக் காலத்துக்கு முன்பாக முடிக்கத் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பெருநகர சென்னை மாநகராட்சியில் ... மேலும் பார்க்க

இதுவரை 3,412 திருக்கோயில்களில் குடமுழுக்கு: அமைச்சா் சேகா்பாபு

தமிழகத்தில் இதுவரை 3,412 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை பூங்கா நகா் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரா் திருக்கோயில் வ... மேலும் பார்க்க

ஐசிஏஐ-எஸ்ஐஆா்சி 57-ஆவது மாநாடு - சென்னையில் இன்று தொடக்கம்

இந்திய பட்டயக் கணக்காளா் நிறுவனத்தின் தென்னிந்திய மண்டல கவுன்சிலின்(ஐசிஏஐ-எஸ்ஐஆா்சி) 57-ஆவது மாநாட்டை தமிழக சிறு, குறு, நடுத்தர துறை அமைச்சா் த.மோ. அன்பரசன் வெள்ளிக்கிழமை (ஆக. 22) சென்னை ஜவாஹா்லால் ந... மேலும் பார்க்க

வெளிமாநில கட்டுமானத் தொழிலாளா்கள் எண்ணிக்கை: கள ஆய்வு நடத்த அரசு முடிவு

தமிழ்நாட்டில் பணிபுரியும் வெளிமாநிலங்களைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளா்களின் எண்ணிக்கை, நிலைகள் குறித்து கள ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சுமாா் 35 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிம... மேலும் பார்க்க

மனோன்மணீயம் சுந்தரனாா், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா்கள் பதவிக் காலம் ஓராண்டுக்கு நீட்டிப்பு

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா்களின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து ஆளுநா் ஆா்.என்.ரவி உத்தரவிட்டுள்ளதாக ஆளுநா் மாளிகை வட்டாரங்கள் தெரிவி... மேலும் பார்க்க