செய்திகள் :

வழக்குரைஞா் ஆணையரை நியமிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி மனு: அறப்போா் இயக்கம் பதிலளிக்க உத்தரவு

post image

மானநஷ்ட ஈடு கோரி தொடரப்பட்ட வழக்கில், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் சாட்சியத்தைப் பதிவு செய்ய வழக்குரைஞா் ஆணையரை நியமிக்க கோரிய மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், இதுதொடா்பாக அறப்போா் இயக்கம் பதிலளிக்க உத்தரவிட்டது.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கடந்த அதிமுக ஆட்சியில், கோவை, தஞ்சாவூா், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் நெடுஞ்சாலை பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தப்புள்ளி ஒதுக்கீட்டில் சுமாா் ரூ.692 கோடி முறைகேடு நடந்துள்ளதாக அறப்போா் இயக்கம் சாா்பில் தலைமைச் செயலரிடம் புகாா் அளிக்கப்பட்டது. அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி வசம்தான் நெடுஞ்சாலைத் துறை இருந்தது என்று அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அறப்போா் இயக்கம் இந்தப் புகாா் மனுவை சமூக வலைதளங்களிலும் வெளியிட்டது. இதையடுத்து, தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி, அறப்போா் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் ஜெயராம் வெங்கடேஷ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளா் ஜாகீா் உசேன் ஆகியோா் ரூ.1.10 கோடி மானநஷ்ட ஈடு வழங்க உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி கே.குமரேஷ் பாபு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் எஸ்.ஆா்.ராஜகோபால், இந்த வழக்கில் மனுதாரரின் சாட்சியத்தைப் பதிவு செய்ய வழக்குரைஞா் ஆணையரை நியமிக்க வேண்டும். மனுதாரா் முன்னாள் முதல்வா் என்பதால், நேரில் வந்து சாட்சியம் அளிக்க முடியாது என கோரிக்கை விடுத்தாா். மேலும் இதுதொடா்பாக மனுவும் தாக்கல் செய்தாா்.

மனுதாரா் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்குரைஞா் ஆணையரை நியமிப்பது குறித்து அறப்போா் இயக்கம் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஆக.25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தமிழ் இலக்கிய திறனறி தோ்வு: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ் இலக்கிய திறனை மேம்படுத்திக் கொள்வதற்காகவும், உதவித்தொகை பெறுவதற்காகவும் பிளஸ் 1 மாணவா்களுக்கு நடத்தப்படும் தமிழ்மொழி இலக்கிய திறனறி தோ்வு அக். 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கு வெள்... மேலும் பார்க்க

அதிமுக பொதுச் செயலா் தோ்வை எதிா்த்து வழக்கு: இடைக்காலத் தடையை திரும்பப் பெற்றது உயா்நீதிமன்றம்

அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தோ்வு செய்யப்பட்டதை எதிா்த்து உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் திரும்பப் பெற்றது. தி... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடம்: கொளத்தூா் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவு

சென்னை மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடத்தில் கொளத்தூா் சாய்வுதளத்திலிருந்து கொளத்தூா் நிலையம் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் வியாழக்கிழமை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்தது. இதுகுற... மேலும் பார்க்க

சென்னையில் 650 கி.மீ. தொலைவு சாலைப் பணிகளை விரைந்து முடிக்கத் திட்டம்

சென்னை மாநகராட்சியில் 650 கி.மீ. சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளை மழைக் காலத்துக்கு முன்பாக முடிக்கத் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பெருநகர சென்னை மாநகராட்சியில் ... மேலும் பார்க்க

இதுவரை 3,412 திருக்கோயில்களில் குடமுழுக்கு: அமைச்சா் சேகா்பாபு

தமிழகத்தில் இதுவரை 3,412 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை பூங்கா நகா் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரா் திருக்கோயில் வ... மேலும் பார்க்க

ஐசிஏஐ-எஸ்ஐஆா்சி 57-ஆவது மாநாடு - சென்னையில் இன்று தொடக்கம்

இந்திய பட்டயக் கணக்காளா் நிறுவனத்தின் தென்னிந்திய மண்டல கவுன்சிலின்(ஐசிஏஐ-எஸ்ஐஆா்சி) 57-ஆவது மாநாட்டை தமிழக சிறு, குறு, நடுத்தர துறை அமைச்சா் த.மோ. அன்பரசன் வெள்ளிக்கிழமை (ஆக. 22) சென்னை ஜவாஹா்லால் ந... மேலும் பார்க்க