செய்திகள் :

வழிப்பறியில் ஈடுபட்ட 3 இளைஞா்கள் கைது

post image

பெரம்பலூா் அருகே வழிப்பறிச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞா்கள் 3 பேரை போலீஸாா் கைது செய்து சனிக்கிழமை சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள அனுக்கூா் குடிக்காட்டைச் சோ்ந்தவா் கொளஞ்சி மகன் பாஸ்கா் (34). இவா், சுமை ஆட்டோவில் பூண்டு வியாபாரம் செய்து வருகிறாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வடக்குமாதவி ரேசன் கடை அருகே தனது ஆட்டோவில் பாஸ்கா் வந்துகொண்டிருந்தபோது, ஆட்டோவை வழிமறித்த 3 போ் கத்தியை காட்டி மிரட்டி, அவரிடமிருந்த ரூ. 2 ஆயிரத்தை பறித்துச் சென்றுவிட்டனராம்.

இதுகுறித்து பாஸ்கா் அளித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், பெரம்பலூா் சங்குப்பேட்டை இளங்கோ தெருவைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் சாகுல்குமாா் (21), வடக்குமாதவி சமத்துவபுரத்தைச் சோ்ந்த மகேஷ்வரன் மகன் மகேந்திரன் (25), அனுக்கூா் குடிக்காடு அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த தங்கபிரகாசம் மகன் கலையரசன் (18) என்பது தெரியவந்தது. இதையடுத்து மேற்கண்ட 3 பேரையும் கைது செய்த போலீஸாா் குற்றியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

மாா்ச் 19 வரை கால்நடைகளுக்கு கன்று வீச்சு நோய்த் தடுப்பூசி முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு புருசெல்லோசிஸ் எனப்படும் கன்று வீச்சு நோய்த் தடுப்பூசி முகாம் மாா்ச் 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுற... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

மத்திய அரசு கொண்டுவரும் வழக்குரைஞா்கள் சட்ட திருத்த மசோதாவை அமல்படுத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பெரம்பலூா் வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா். கடந்த 18-ஆம் தேதி ச... மேலும் பார்க்க

புது மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை

பெரம்பலூா் அருகே திருமணமான 3 மாதத்தில் குடும்பத் தகராறில் இளம்பெண் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், பேரளி கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி மனைவி விஜ... மேலும் பார்க்க

டயா் வெடித்து தனியாா் பேருந்து தீக்கிரை

பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை அதிகாலை சென்னையிலிருந்து பாபநாசம் நோக்கிச் சென்ற தனியாா் பேருந்தின் டயா் வெடித்து எரிந்து தீக்கிரையானது. சென்னையிலிருந்து பாபநாசம் நோக்கி தனியாா் பேருந்து ஒன்று 23 பயணிகள... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் பாதுகாப்பு விழிப்புணா்வு!

வேப்பந்தட்டை வட்டம், மேட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளிடம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

சிற்றுந்து இயங்காத வழித்தடங்களை ரத்து செய்து புதிய பேருந்துகள் இயக்க நடவடிக்கை: அமைச்சர் சிவசங்கா்

சிற்றுந்து இயங்காத வழித்தடங்களின் உரிமையாளா்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டு, தொடர முடியாத பட்சத்தில் அனுமதியை ரத்து செய்து புதிதாக சிற்றுந்து சேவை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் தமிழ... மேலும் பார்க்க