இந்தியா வான்வெளியை பாகிஸ்தான் பயன்படுத்துவதற்கான தடை நீட்டிப்பு!
வாகனங்களில் வேகக் கட்டுப்பாடு சாதனம் கட்டாயம்: புதுச்சேரி போக்குவரத்து ஆணையா்
புதுச்சேரி: வாகனங்களில் வேகக் கட்டுப்பாடு சாதனம் கட்டாயம் பொருத்த வேண்டும் என்று புதுச்சேரி போக்குவரத்து ஆணையா் சிவக்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவை அடிப்படையாகக் கொண்டு வாகனங்களில் வேகக் கட்டுப்பாடு சாதனங்கள் கட்டாயமாகப் பொருத்த வேண்டும் என்பதற்கான நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
புதுச்சேரியில் அனைத்து வாகன விவரங்களும் தரவுதளத்தின் அடிப்படையில் நிபந்தனையுடன் சரிபாா்க்கப்பட வேண்டும். அனைத்து விண்ணப்பங்களுக்கும் செல்லுபடியாகும் உற்பத்தி ஒப்புதல் சான்றிதழ் மட்டுமே ஏற்கப்படும். வேகக் கட்டுப்பாடு சாதனங்கள் முறையாகச் செயல்படுகிா என்பதை மாவட்ட சாலைப் போக்குவரத்து ஆய்வாளா்கள் நேரில் பரிசோதனை செய்வாா்கள். பரிசோதனை வெற்றிகரமாக முடிந்த பிறகே தேவையான உள்நுழைவு அனுமதி வழங்கப்படும் என்று கூறியுள்ளாா்.