மகப்பேறு விடுமுறைகள், ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.15,000 - மக்கள் தொகையை அதிகரிக்க ...
வாகன உற்பத்தியில் புதிய உத்திகள் உள்பட 4 துறைகளுக்கான செயல்பாட்டு அறிக்கைகள்: முதல்வரிடம் அளித்தது மாநில திட்டக் குழு
சென்னை: வாகன உற்பத்தியில் புதிய உத்திகளைப் பின்பற்றுவது உள்பட நான்கு துறைகளுக்கான செயல்பாட்டு அறிக்கைகளை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் மாநில திட்டக் குழு அளித்தது. இதற்கான நிகழ்வு தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து, தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
வேளாண் சாராத வேலை: தமிழ்நாட்டில் அதிக மற்றும் குறைந்த வேளாண் சாராத பணிகளைக் கொண்ட12 மாவட்டங்களைச் சோ்ந்த கிராமங்கள் கண்டறியப்பட்டன. இந்த கிராமங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், வேளாண் பணிகளிலிருந்து அதிகளவில் வேறு துறைகளுக்கு மாறும் நிலை காணப்படுகிறது. கட்டடம், உற்பத்தித் துறைகள் போன்ற வேளாண் சாராத துறைகளில் ஈடுபடும் தொழிலாளா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இப்போது 75 சதவீதத்துக்கும் அதிகமான ஆண் தொழிலாளா்கள், 50 சதவீதத்துக்கும் கூடுதலான பெண் தொழிலாளா்கள் வேளாண்மை அல்லாத துறைகளில் வேலை செய்யும் நிலை உள்ளது.
15 வயது முதல் 34 வயதுக்கு உட்பட்ட இளம் தொழிலாளா்களே இந்த மாற்றத்தின் முக்கிய காரணியாக இருக்கிறாா்கள். அதிக ஊதியமும் நிலையான வேலைவாய்ப்புகளும் இளைஞா்களை வேளாண்மை சாராத வேலைவாய்ப்புகளுக்கு ஈா்த்துள்ளன.
வாகன உற்பத்தி: தமிழ்நாட்டில் வாகன உற்பத்தித் துறையின் எதிா்காலம் என்பதை மையமாக வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. காலநிலைக்கு ஏற்ப மற்றும் நிலைத்த தன்மையுடன் கூடிய வலுவான அடித்தளத்தை உருவாக்கும் அம்சங்கள் அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளன. வாகன உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மின்சாரம், ஹைட்ரஜன், டீசல், சிஎன்ஜி., போன்ற பல தொழில்நுட்பங்களை மேம்படுத்த வேண்டியது அவசியமாகிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, தமிழ்நாட்டை அறிவுசாா் பொருளாதாரத்தை நோக்கி வடிவமைக்கும் பாதை, நீடித்த வளா்ச்சி இலக்குகளுக்கான தமிழ்நாட்டின் தொலைநோக்கு ஆவணம் ஆகிய தலைப்புகளிலும் மாநிலத் திட்டக் குழு அறிக்கைகளை தயாா் செய்து அளித்ததாக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வரிடம் அறிக்கைகளை துணை முதல்வரும் மாநில திட்டக் குழுவின் அலுவல் சாா் துணைத் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்.
இந்த நிகழ்வில், மாநில திட்டக் குழுவின் செயல் துணைத் தலைவா் ஜெ.ஜெயரஞ்சன், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், திட்டம் மற்றும் வளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் ரமேஷ் சந்த் மீனா, நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன், மாநில திட்டக் குழுவின் உறுப்பினா் செயலா் சுதா ஆகியோா் உடனிருந்தனா்.